Don't Miss!
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பள்ளி மாணவர்களாக நடிப்பது சவாலாக இருந்தது... முதல் நீ முடிவும் நீ பட நடிகை சுவாரசிய பேட்டி !
சென்னை : முதல் நீ முடிவும் நீ என்ற கவிதை நயமான திரைப்படத்தை இயக்குநர் தர்புகா சிவா கொடுத்து இருக்கிறார்.
Recommended Video
நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருந்த தர்புகா சிவா, முதல் நீ முடிவும் நீ திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி பலரின் ஆதரவை பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தில் கேத்ரின் கதாபாத்திரத்தில் நடித்த பூர்வா ரகுநாத் ஒன்இந்தியா ஃபிலிமிபீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியை பார்க்கலாம்.
விடாத கருப்பாய் பிரபலங்களை துரத்தும் கொரோனா...நடிகர் எஸ்.வி.சேகருக்கும் கொரோனா
சந்தோஷமா இருக்கு
கேள்வி : முதல் நீ முடிவு நீ திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க?
பதில் : இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த பாடத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்தோம் என்றார். அதுமட்டும் இல்லாமல் யார் யார் எந்த கேரக்டரோ அந்த கதாபாத்திரத்தின் கதையை மட்டுமே சொன்னார். படம் முடிந்த பிறகுகூட கதை என்ன என்பது யாருக்கும் தெரியாது என்றார்.
சுத்தமா மேக்கப் போடல
கேள்வி : ஸ்கூல் யூனிஃபாம் போட்டு நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
பதில் : ஸ்கூல் போற பொண்ணா நடிக்கனும்னா அதற்காக, உருவத்தை மாற்றினால் மட்டும் போதாது, அதற்காக மென்டலாக தயாராக வேண்டும் அப்போது தான் அந்த கதாபாத்திரத்தில் இயல்பாக நடிக்க முடியும். இதனால், கேத்ரின் எப்படி சிரிப்பா, எப்போ கோவப்படுவா என்பதை கேத்ரினா மாறி கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்தேன் என்றார். மேலும், அந்த வயதில் மாணவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படித்தான் நடித்தோம், ஐப்ரோ த்ரெட்டிங் கூட பண்ணவில்லை என்றார்.
மனதில் பல வலி
கேள்வி : கேரக்டரோட ஒன்றியே பேசுறீங்க உண்மையில் பூர்வா எப்படி ?
பதில் : பூர்வா அப்படி இல்லை, போல்டானா ஆளு, கோவமான ஆளு இரண்டையும் போட்டு நாம குழப்பிக் கொள்ளுவோம் ஆனால் கேத்ரின் அப்படி இல்லை அவளுக்குள் இருக்கும் வலியை மறைக்க அவள் அப்படி இருக்கிறாள் என்று கேத்ரின் கதாபாத்திரமாகவே பதிலளித்தார்.
படம் இயல்பாக இருந்தது
கேள்வி : தர்புகா சிவா கூட பணியாற்றியது எப்படி இருந்தது ?
பதில் : எதுவுமே செயற்கையாக இல்லாமல் எல்லாமே ரொம்ப இயல்பா இருந்தது, அது அவரிடம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. கேத்ரின் கதாபாத்திரம் சவாலான கேரக்டர் அவளின் மனதில் பல வலி இருக்கும் ஆனால் அதை அந்த படத்தில் சொல்லமாட்டாங்க, அந்த வலி எனக்கு தெரியும் அதை எனக்கு மிகவும் அழகாக தர்புகா சிவா புரியவைத்தார் என்றார்.