எம்.ஜி.ஆர்.,கிட்ட திமிர் காமிச்சேன்.. இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் பேட்டி!
சென்னை: இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகத்தின் பார்ட் 2 பேட்டி வெளியாகி இருக்கிறது.
Recommended Video
கேட்கும் கேள்விகளுக்கு டக்கு டக்குன்னு பதில் சொல்லி வியக்க வைக்கும் ரமேஷ் விநாயகம், தனது இசை பயணத்தின் பல பரிமாணங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.
யூனிவர்சிட்டி, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, நளதமயந்தி, அழகிய தீயே, ஜெர்ரி, தொட்டி ஜெயா, சாட்டை, என்றென்றும் புன்னகை, மூன்று பேர் மூன்று காதல், மொசக்குட்டி உள்ளிட்ட பல படங்களுக்கு அழகாக இசையமைத்துள்ளார் ரமேஷ் விநாயகம்.

சிறு வயதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கைகளால் பரிசு வாங்க சென்ற ரமேஷ் விநாயகம், எம்.ஜி.ஆர் என்ன பெரிய ஆளா என்ற நினைப்பில், அவர் போலவே கருப்பு கண்ணாடி அணிந்து சென்றுள்ளார்.
ஆனால், பரிசை வாங்க எம்.ஜி.ஆர் அருகே சென்றதும், கருப்பு கண்ணாடி வழியாக எம்.ஜி.ஆரின் மின்னும் அழகை பார்த்து மிரண்டு போய், பரிசை தவற விட்டுள்ளார்.
அந்த பரிசை கீழே விழ விடாமல் சட்டென்று கேட்ச் செய்த எம்.ஜி.ஆர்., தனக்கு மீண்டும் வழங்கிய பழைய மலரும் நினைவுகளை இந்த இரண்டாம் பாகத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், இசையை எழுத்து வரிகளாக பதிவு செய்யும் பணிகளிலும் ரமேஷ் விநாயகம் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஏய் நீ ரொம்ப அழகா இருக்க படத்திற்காக கவிஞர் வாலியுடன் பணிபுரிந்த அனுபவங்களையும் ஷேர் செய்துள்ளார் ரமேஷ் விநாயகம்.
அவரது இன்ஃபர்மேடிவ்வான இரண்டாம் பாகத்தை காண வீடியோ லிங்கை கிளிக் செய்யுங்க!


Click it and Unblock the Notifications











