Don't Miss!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தனுஷுடன் மீண்டும் இணைவேன்..இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் நம்பிக்கை!
சென்னை : தனுஷுடன் இணைந்து ஏற்கனேவே பாடலை உருவாக்கிய இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் மீண்டும் தனுஷுடன் இணைவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆர்.கே .சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'வேட்டை நாய்'. இப்படத்தை ஜெய்சங்கர் இயக்கி இருக்கிறார் . ராம்கி, சுபிக்ஷா நடித்துள்ளனர். கணேஷ் சந்திரசேகரன் இசையமைத்துள்ளார்.
வேட்டைநாய்' படத்தில் அனிருத் ஒரு தர லோக் பாடலைப் பாடியிருக்கிறார்.
கொரோனா லாக்டவுன் நேரத்துல இப்படியொரு ட்ரிப்.. 300 கி.மீ தூரம் பைக்கில் சென்றுவந்த பிரபல ஹீரோயின்!
குத்துப் பாடலும் உள்ளன
இப்படத்தில் இரண்டு மெலடி பாடல்களும் ஒரு குத்துப் பாடலும் உள்ளன. தர லோக்கலாக உள்ள அதிரடி குத்துப் பாடலை அனிருத் பாடியிருக்கிறார். ஆலுமா டோலுமா போல் இந்த பாடல் பட்டைய கிளப்பும் என்று கூறுகிறார் இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்.
ஒரு பாடலைப் பாடி
'எழுமின்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் , அந்தப் படத்திற்காகத் தனுஷையும் அனிருத்தையும் பாடவைத்தார். அந்தப் பாடல்கள் மில்லியன் கணக்கில் ஹிட்சை அள்ளின. இவர் இரண்டாவது படமாக இசையமைக்கும் 'வேட்டைநாய்' படத்தில் இவரது இசையில் அனிருத் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.
சகோதரர்கள் போன்றவர்கள்
"நான் முதலில் ' எழுமின்' படத்திற்கு இசையமைத்த போது அதில் தனுஷ் பாடினால் நன்றாக இருக்கும் என்று அவரை அணுகிக் கேட்டேன் .நான் அறிமுக இசையமைப்பாளன் ,புதியவன் என்பதையெல்லாம் பார்க்காமல் அந்தப் படத்தில் பாடிக் கொடுத்தார் .அந்த பாடல் பெரிய ஹிட்டானது .அதே போல் அனிருத்தையும் கேட்டேன். அவரும் பாடிக் கொடுத்தார். இரண்டு பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றன. தனுஷும் அனிருத்தும் என் சகோதரர்கள் போன்றவர்கள். எனவே அவர்களுடன் உரிமையாகக் கேட்டேன் .அவர்கள் பெரிய ஆள் ,சின்ன ஆள் என்று பார்ப்பதில்லை. மனிதர்களை மட்டுமே பார்ப்பவர்கள். எனவேதான் ஒரு புதியவனான எனக்குப் பாடிக்கொடுத்தார்கள். அந்தப் படத்தில் யோகி பி.யும் எனக்காகப் பாடியிருந்தார்.
அக்கறையோடு
அனிருத் 'வேட்டைநாய் 'படத்தில் பாடியிருக்கும் & அந்தப் பாடல் தர லோக்கலாக இருக்கும் .இந்தப் பாடலை ராஜகுரு சாமி எழுதியிருக்கிறார். இப்பாடல் அடித்து தூள் கிளப்பும் .விரைவில் வெளிவர இருக்கிறது. பாடிக் கொடுத்தவுடன் அந்த பாடலை எப்படி வெற்றி பெற வைப்பது எப்படி என்பதிலும் அக்கறையோடு எனக்கு உதவுகிறார் அனிருத். அவருக்கு 'ஆலுமா டோலுமா' போல இந்தப்பாடல் பட்டைய கிளப்பும் ஒரு பாடலாக இருக்கும்.
கைக்கெட்டும் தூரத்தில்
முதல் படத்தில் தனுஷுடன் இணைந்த நான், மீண்டும் அவரை வைத்துப் பாட வைப்பேன். மீண்டும் அவருடன் இணைவேன் என்று உறுதியாக நம்புகிறேன். விரைவில் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் கைக்கெட்டும் தூரத்தில் தான் அந்த வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறேன்.எப்படி சொல்கிறேன் என்றால் தனுஷின் அன்பைப் பற்றி எனக்குத் தெரியும்.
2 படம் ஒப்பந்தம்
'வேட்டைநாய்' படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் அதில் இரண்டும் மெலடியாக இருக்கும் .அனிருத் பாடிய பாடல் அதிரடியாக இருக்கும்" என்று கூறுகிற கணேஷ் சந்திரசேகரன் , ஆரி கதாநாயகனாக நடிக்கும் இரண்டு படங்களில் இசையமைக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறினார்.