Don't Miss!
- News ஐஏஎஸ் அதிகாரி அதுல் ஆனந்தின் மகள் கலெக்டர் ஆகிறார்.. 4வது முயற்சியில் பிரம்மாண்ட வெற்றி
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
‘அம்மா’ தான் என் ரோல் மாடல்... இப்படிச் சொல்வது ஸ்ருதிஹாசன்!
சென்னை: நட்சத்திர தம்பதியான கமல் -சரிகாவின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன், ‘தன் அம்மா தான் தனது ரோல் மாடல்' எனத் தெரிவித்துள்ளார்.
ஏழாம் அறிவு மற்றும் 3 படங்களைத் தொடர்ந்து தமிழில் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட நடிகை ஸ்ருதிஹாசன், ஹரி இயக்கத்தில் விஷாலின் ஜோடியாக நடித்த பூஜை திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.
இந்தியில் நஸ்ருதீன் ஷா, நானா படேகர் மற்றும் டிம்பிள் கபாடியா என மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் வெல்கம் பேக் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதி.
ஒரே நேரத்தில் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என நடித்து வரும் ஸ்ருதி ஆனந்த விகடனுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் தனது ரோல் மாடல், தனது அம்மா சரிகா தான் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-
தைரியசாலி....
அம்மா சரிகா ரொம்பவே சுதந்திரமானவங்க. தைரியசாலி. எந்தப் பிரச்சினையையும் சமாளிப்பாங்க. என் ரோல் மாடல் அவங்க தான்.
மும்பை சம்பவம்....
என் மும்பை வீட்டில் யாரோ அடையாளம் தெரியாத ஆள் நுழைஞ்சிட்டான்னு நியூஸ் வந்தப்ப, எல்லாரும் பயந்தாங்க.
கம்பீரம்....
ஆனா, ‘நீ என் பொண்ணு. எதுக்கும் பயப்பட மாட்டேனு எனக்குத் தெரியும்'னு கம்பீரமா சொன்னாங்க. அது என் தன்னம்பிக்கையை இன்னும் ஜாஸ்தி ஆக்குச்சு.
பதறிடுவாங்க...
அதே சமயம் எனக்கு சின்ன ஜூரம் வந்தாக்கூடப் பதறிடுவாங்க. என் கையைப் பிடிச்சிட்டுப் பக்கத்துலயே இருப்பாங்க. இப்போ வரை அப்படித்தான்.
என் சொத்துக்கள்...
அப்பா, அம்மா, அக்ஷரா... இந்த மூணு பேரும் தான் என் சொத்து. இவங்க இல்லைன்னா... இந்த ஸ்ருதி இல்லை' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.