Don't Miss!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சைக்கோ படத்துல ஒண்ணும் இல்லை.. பாரம் படத்துக்கு போஸ்டர் ஒட்டப் போறேன்.. மிஷ்கின் பரபர பேச்சு!
Recommended Video
சென்னை: பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் தேசிய விருது பெற்றுள்ள பாரம் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
இந்த படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில், கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், தனது சைக்கோ படத்தில் ஒன்றும் இல்லை என்றும், இந்த படத்திற்கு தான் தெருத்தெருவாக சென்று போஸ்டர் ஒட்டப் போகிறேன் என்றும் பரபரப்பாக பேசியுள்ளார்.
ராம், வெற்றிமாறன் மற்றும் தன்னுடைய படங்களுக்கு பத்திரிகையாளர் மார்க் போடவில்லை என்றாலும், கூட அந்த மதிப்பெண்களை எல்லாம் சேர்த்து இந்த படத்திற்கு போடுங்கள் எனக் கூறியுள்ளார்.
ஒளியின் நாயகன் பாலு மகேந்திரா.. காட்சி பேழையின் ஹீரோ நினைவு நாள் இன்று!
தமிழ் ரசிகர்கள் பார்வைக்கு விரைவில் ரிலீசாகவுள்ள இந்த பாரம் திரைப்படம் கடந்த ஆண்டு தேசிய விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வயதான வாட்ச்மேன் தந்தையை பார்த்துக் கொள்ள முடியாத மகன், தலைகூத்தல் எனும் முறைப்படி எப்படி கொல்கிறான் என்பதை வலியுடனும், வேதனையுடனும் பறைசாற்றி உள்ளது இந்த பாரம் என மிஷ்கின் புகழ்ந்து பேசியுள்ளார்.
ஏழ்மையான குடும்பத்தில், வயதான பெற்றோர்களை பார்க்க முடியாதவர்கள், இன்னமும் கிராமங்களில் இரண்டு நாள் தலையில் எண்ணெய் தேய்த்து, ஐஸ் தண்ணீரில் முக்கி, இளநீர் கொடுத்து கொல்லும் பாதக செயல் நடைபெற்று வருவதை இந்த படம் வெளிக்காட்டியுள்ளது.
குழந்தைகளுக்கு கள்ளிப் பால் கொடுத்து கொல்லும் வழக்கத்தை மையமாக வைத்து கருத்தம்மா படம் எடுக்கப்பட்டிருந்தது.
தலைகூத்தல் காட்சியை விஷாலின் மருது படத்தில் வைத்திருந்தனர். இந்நிலையில், அதனை மையமாக வைத்து இப்படி ஒரு படத்தை இயக்குநர் பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கி உலகளவில் விருதுகளை குவித்துள்ளார்.
விருது படங்கள் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையில், கண்டிப்பாக பாரம் படத்தை அப்படி நினைக்காதீர்கள், நிச்சயம் தியேட்டருக்கு சென்று உண்மையான சினிமாவை ரசியுங்கள் என பிரஸ் மீட்டில் பேசிய பிரபலங்கள் கேட்டுக் கொண்டனர்.