Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Technology தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நமீதாவின் குதிரை பயம் நமக்கு நமீதா குதிரையைப் பிடிக்கும். ஆனால் நமீதாவுக்கு நிஜக் குதிரையை பிடிக்காதாம்.அரேபியக் குதிரையே அரண்டு போகும் அளவுக்கு படு அட்டகாசமாக இருப்பவர் நமீதா. குதிரையும், கொள்ளும்எப்படிப் பிரிக்க முடியாதவையோ, அதுபோலத்தான் நமீதாவும், அவரது கிளாமரும்.திமிரும் அழகுடன் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கும் நமீதாவின் கிளாமர் நடிப்பை முழுசாகசுரண்டியெடுத்து 2 படங்கள் தயாராகி வருகின்றன.அழகான பொண்ணுதான், மின்னலடிக்குது என்ற பெயரில் உருவாகி வரும் படங்களில் நமீதாவுக்குமுக்கியத்துவம் கொடுத்து கிளாமரில் ரசிகர்களை க்குளிக்க வைக்கப் போகிறார்கள். இப்போது நமீதா முக்கியரோலில் நடிக்க ஆங்கிலப் படம் ஒன்றும் தயாராகிறது.மாயா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை முழுக்க முழுக்க ஊட்டியிலேயே வைத்து சுட்டு வருகிறார்கள்.கிரெக் டிரி என்பவர் தயாரிக்கும் இப்படத்தில் ஷன்னி என்பவர் நாயகனாகவும், யாவோரா என்பவர்ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.இதில் நமீதாவுக்கு முக்கிய கேரக்டர் கொடுத்துள்ளனராம். அசோக்குமார்தான் கேமராமேன். எரிக் மேனிவ்என்பவரின் இயக்கத்தில் வளரும் இப்படம் ஊட்டியைச் சுற்றிலும் படமாக்கப்பட்டு வருகிறது.மறுபடியும் குதிரை கதைக்கு வருவோம். குதிரை கணக்கில் மதமதன்னு இருக்கும் நமீதாவுக்கு, நிஜக்குதிரைங்களைப் பார்த்தால் தொடை நடுங்கிப் போய் விடுமாம். கரப்பான் பூச்சி, பல்லி, தவளை, பாம்புஇதையெல்லாம் பார்த்தால் கூட எனக்குப் பயம் கிடையாதுங்க, ஆனா இந்தக் குதிரையப் பார்த்து விட்டால்போதும், கிலி வந்து விடும் என்று நடுங்கியபடி கூறுகிறார் நமீதா.குதிரை மீது அப்படியென்ன பீதிம்மா என்று பாசத்துடன் நமீதாவைக் கேட்டோம். அதை ஏன் கேக்கறீங்க, எங்கவீட்டிலேயே ஒரு குதிரை லாயம் இருக்கு. இன்றும் கூட நிறைய குதிரைகள் இருக்கிறது. எங்க அப்பாவுக்குகுதிரைங்கன்னா உயிர். அவர்தான் வளர்த்து வருகிறார். அந்தப் பக்கம் கூட நான் எட்டிப் பார்க்க மாட்டேன்.நான் ஆறு வயசாக இருக்கும்போது, குதிரை சவாரிக்கு ஆசைப்பட்டேன். புள்ள ஆசைப்படுதேன்னு குதிரை மீதுஏற்றி விட்டார் எங்க அப்பா. ஒரு ரவுண்டு குதிரை ஒழுங்காக போனது. அப்புறம் வந்தது வினை. கூட வந்தடிரெய்னரை தூக்கித் தள்ளி விட்டு ஓடியது பாருங்க. ஓட்டம்னா ஓட்டம் அப்படி ஒரு ஓட்டம்.மேலே இருந்த நான் பயத்தில் கத்தினேன். குதிரையின் வேகத்தில் பிடறியைப் பிடித்திருந்த என் கைகள் நழுவிகுதிரை மீதிருந்து தொங்கினேன்.ஒரு வழியாக ஓடி வந்த டிரெய்னர் குதிரையைக் கஷ்டப்பட்டுப் பிடித்து என்னை கீழே இறக்கினார். அப்புறம்தான்எனக்கு உயிர் வந்தது. அத்தோடு குதிரைக்குப் போட்டேன் ஒரு பெரிய கும்பிடு. அன்று முதல் குதிரையைப்பார்த்தாலே ஓடிப் போய் விடுவேன்.இப்போது கூட ஒரு படத்தில் குதிரை சவாரி செய்ய வேண்டும் என்றார்கள். அப்படி ஒரு காட்சியில் கண்டிப்பாகநடித்தே ஆக வேண்டும் என்றால் உங்க படமே வேண்டாம் என்று கூறி விட்டேன் என்றார் குதிரை.. ஸாரி நமீதா.
அரேபியக் குதிரையே அரண்டு போகும் அளவுக்கு படு அட்டகாசமாக இருப்பவர் நமீதா. குதிரையும், கொள்ளும்எப்படிப் பிரிக்க முடியாதவையோ, அதுபோலத்தான் நமீதாவும், அவரது கிளாமரும்.
திமிரும் அழகுடன் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கும் நமீதாவின் கிளாமர் நடிப்பை முழுசாகசுரண்டியெடுத்து 2 படங்கள் தயாராகி வருகின்றன.
அழகான பொண்ணுதான், மின்னலடிக்குது என்ற பெயரில் உருவாகி வரும் படங்களில் நமீதாவுக்குமுக்கியத்துவம் கொடுத்து கிளாமரில் ரசிகர்களை க்குளிக்க வைக்கப் போகிறார்கள். இப்போது நமீதா முக்கியரோலில் நடிக்க ஆங்கிலப் படம் ஒன்றும் தயாராகிறது.
இதில் நமீதாவுக்கு முக்கிய கேரக்டர் கொடுத்துள்ளனராம். அசோக்குமார்தான் கேமராமேன். எரிக் மேனிவ்என்பவரின் இயக்கத்தில் வளரும் இப்படம் ஊட்டியைச் சுற்றிலும் படமாக்கப்பட்டு வருகிறது.
மறுபடியும் குதிரை கதைக்கு வருவோம். குதிரை கணக்கில் மதமதன்னு இருக்கும் நமீதாவுக்கு, நிஜக்குதிரைங்களைப் பார்த்தால் தொடை நடுங்கிப் போய் விடுமாம். கரப்பான் பூச்சி, பல்லி, தவளை, பாம்புஇதையெல்லாம் பார்த்தால் கூட எனக்குப் பயம் கிடையாதுங்க, ஆனா இந்தக் குதிரையப் பார்த்து விட்டால்போதும், கிலி வந்து விடும் என்று நடுங்கியபடி கூறுகிறார் நமீதா.
நான் ஆறு வயசாக இருக்கும்போது, குதிரை சவாரிக்கு ஆசைப்பட்டேன். புள்ள ஆசைப்படுதேன்னு குதிரை மீதுஏற்றி விட்டார் எங்க அப்பா. ஒரு ரவுண்டு குதிரை ஒழுங்காக போனது. அப்புறம் வந்தது வினை. கூட வந்தடிரெய்னரை தூக்கித் தள்ளி விட்டு ஓடியது பாருங்க. ஓட்டம்னா ஓட்டம் அப்படி ஒரு ஓட்டம்.
மேலே இருந்த நான் பயத்தில் கத்தினேன். குதிரையின் வேகத்தில் பிடறியைப் பிடித்திருந்த என் கைகள் நழுவிகுதிரை மீதிருந்து தொங்கினேன்.
இப்போது கூட ஒரு படத்தில் குதிரை சவாரி செய்ய வேண்டும் என்றார்கள். அப்படி ஒரு காட்சியில் கண்டிப்பாகநடித்தே ஆக வேண்டும் என்றால் உங்க படமே வேண்டாம் என்று கூறி விட்டேன் என்றார் குதிரை.. ஸாரி நமீதா.