twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பரத்துடன் கல்யாணமா-நமீதா என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவோம் என யாரும் மிரட்டவில்லை என்றுநடிகை நமீதா கூறியுள்ளார். நமீதா-பாய் பிரண்ட் பரத் கபூருக்கு நில விவகாரத்தில் மிரட்டல் வந்ததையடுத்து 2நாட்களுக்கு முன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்துஇருவரும் புகார் கொடுத்தனர்.இந் நிலையில் சில இதழ்களில் நமிதா குறித்து தாறுமாறான செய்திகள் வெளியாகின.பாலியல் பலாத்காரம் செய்வோம் என நமிதா மிரட்டப்பட்டதாக செய்திகள் வந்தன.இதையடுத்து பிரஸ்மீட் வைத்து நிருபர்களிடம் நடந்ததை விளக்கினார் நமிதா.பிரச்சினை என்ன என்பது குறித்து விலாவாரியாக விளக்கினார். அவர் கூறியதாவது:நானும், எனது நண்பர் பரத்கபூர்மற்றும் 3 பேர் சேர்ந்து கேட்ஜெட்ஸ் குரு.காம் என்றபெயரில் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இதில் எனது பங்கு 50சதவீதமாகும்.இந்த நிறுவனத்திற்காக மையிலாப்பூரில் இடம் ஒன்றை வாங்கியுள்ளோம். ஆனால்நாங்கள் அங்கு நிறுவனம் அமைக்க அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர்.நாங்கள் நிறுவனம் அமைக்க வேண்டுமானால் எங்களுக்கு 2 சதவீத கமிஷன் தரவேண்டும் எனறு என்னை போனில் மிரட்டிய நபர் தெரிவிததார். அவர் தமிழில்பேசியதால் அவர் பேசியதில் பாதி தான் எனக்குப் புரிந்தது. (அம்புட்டு புரிஞ்சதா?)கமிஷன் கேடடு மட்டுமே அவர் மிரட்டினார். மற்றபடி பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன என்றோ, கொலை மிரட்டலோ அவர் விடுக்கவில்லை. அவர் ஒருஆள்தானா அல்லது கும்பல் ஏதும் பின்னணியில் இருக்கிறதா என்று எனக்குத்தெரியவில்லை.இது ஒரு சின்ன விஷயம்தான். அதனால்தான் ஆணையர் அலுவலகத்தில் நான் புகார்கொடுத்து விட்டு வந்தபோது நிருபர்கள், புகைப்படக்காரர்கள் ஆகியோர் என்னைசூழ்ந்தபோது எதுவும் சொல்லாமல் ஓடி விட்டேன் என்றார் நமீதா.சூடான செய்தியை சொல்லி முடித்த நமீதா பின்னர் தனது சொந்த ஊரான குஜராத்மாநிலம் சூரத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ளம் குறித்தும் பேசினார்.அங்கு பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொலைபேசி எல்லாம் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் எனது பெற்றோருடன் கூட தொடர்பு கொள்ளமுடியாமல் தவித்துவருகிறேன் என்றார்.தொடர்ந்து அவர் பேசுகையில், பரத்கபூர் எனது தொழில்முறை பார்ட்னர் தான் (ஆனா,இருவரும் தனியே ஒரே வீட்ல இருக்காங்கோ). அவரைக் கல்யாணம் செய்துகொள்வது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.அழகான பொண்ணுதான் படத்தில் எனக்கு ஜோடியாக நடிப்பவர் மிகவும் சின்னப்பையன் என்று நியூஸ் வருகிறது. அவர் ஒன்றும் குழந்தை இல்லை. படத்தின்கதையைப் பொருததவரை ஒரு இளம் வாலிபனின் கனவுக் கன்னியாக நான்வருகிறேன். கதை என்னை வைத்துத்தான் நகரும்.நான் நடித்த மாயா (அதில் மகா கிளுகிளுப்பு காட்டியுள்ளார் நமிதா) ஹாலிவுட் படம்அல்ல. அது ஒரு ஆங்கிலப் படம். சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது என்றார்நமீதா.எல்லாப் படங்களிலும்கிளாமராகவே நடிக்கிறீர்களே என்ற கேள்விக்கு ரசிகர்கள்என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ, அப்படித் தானே நடிகக முடியும்?கவர்ச்சியும், காமெடியும்தான் இப்போதைய டிரண்டு. அவை இலலாமல் எப்படி படம்எடுக்க முடியும்.?.அதேசமயம வித்தியாசமான பாத்திரங்களிலும் நடிக்கத்தான் செய்கிறேன. ஒருபடத்தில் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறேனே என்றார்.நல்லவேளை, மன்சூர் அலிகான் இன்ஸ்பெக்டர் டிரஸ்ஸில் கோர்ட்டுக்குப் போனதுமாதிரி கமிஷனர் டிரஸ்ஸில் போலீஸ் ஆணையர் கமிஷனர் அலுவலகம் போகாமல்விட்டாரே நமீதா.

    By Staff
    |

    என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவோம் என யாரும் மிரட்டவில்லை என்றுநடிகை நமீதா கூறியுள்ளார்.

    நமீதா-பாய் பிரண்ட் பரத் கபூருக்கு நில விவகாரத்தில் மிரட்டல் வந்ததையடுத்து 2நாட்களுக்கு முன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்துஇருவரும் புகார் கொடுத்தனர்.

    இந் நிலையில் சில இதழ்களில் நமிதா குறித்து தாறுமாறான செய்திகள் வெளியாகின.பாலியல் பலாத்காரம் செய்வோம் என நமிதா மிரட்டப்பட்டதாக செய்திகள் வந்தன.

    இதையடுத்து பிரஸ்மீட் வைத்து நிருபர்களிடம் நடந்ததை விளக்கினார் நமிதா.பிரச்சினை என்ன என்பது குறித்து விலாவாரியாக விளக்கினார். அவர் கூறியதாவது:

    நானும், எனது நண்பர் பரத்கபூர்மற்றும் 3 பேர் சேர்ந்து கேட்ஜெட்ஸ் குரு.காம் என்றபெயரில் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இதில் எனது பங்கு 50சதவீதமாகும்.

    இந்த நிறுவனத்திற்காக மையிலாப்பூரில் இடம் ஒன்றை வாங்கியுள்ளோம். ஆனால்நாங்கள் அங்கு நிறுவனம் அமைக்க அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர்.

    நாங்கள் நிறுவனம் அமைக்க வேண்டுமானால் எங்களுக்கு 2 சதவீத கமிஷன் தரவேண்டும் எனறு என்னை போனில் மிரட்டிய நபர் தெரிவிததார். அவர் தமிழில்பேசியதால் அவர் பேசியதில் பாதி தான் எனக்குப் புரிந்தது. (அம்புட்டு புரிஞ்சதா?)

    கமிஷன் கேடடு மட்டுமே அவர் மிரட்டினார். மற்றபடி பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன என்றோ, கொலை மிரட்டலோ அவர் விடுக்கவில்லை. அவர் ஒருஆள்தானா அல்லது கும்பல் ஏதும் பின்னணியில் இருக்கிறதா என்று எனக்குத்தெரியவில்லை.

    இது ஒரு சின்ன விஷயம்தான். அதனால்தான் ஆணையர் அலுவலகத்தில் நான் புகார்கொடுத்து விட்டு வந்தபோது நிருபர்கள், புகைப்படக்காரர்கள் ஆகியோர் என்னைசூழ்ந்தபோது எதுவும் சொல்லாமல் ஓடி விட்டேன் என்றார் நமீதா.

    சூடான செய்தியை சொல்லி முடித்த நமீதா பின்னர் தனது சொந்த ஊரான குஜராத்மாநிலம் சூரத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ளம் குறித்தும் பேசினார்.

    அங்கு பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொலைபேசி எல்லாம் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் எனது பெற்றோருடன் கூட தொடர்பு கொள்ளமுடியாமல் தவித்துவருகிறேன் என்றார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், பரத்கபூர் எனது தொழில்முறை பார்ட்னர் தான் (ஆனா,இருவரும் தனியே ஒரே வீட்ல இருக்காங்கோ). அவரைக் கல்யாணம் செய்துகொள்வது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

    அழகான பொண்ணுதான் படத்தில் எனக்கு ஜோடியாக நடிப்பவர் மிகவும் சின்னப்பையன் என்று நியூஸ் வருகிறது. அவர் ஒன்றும் குழந்தை இல்லை. படத்தின்கதையைப் பொருததவரை ஒரு இளம் வாலிபனின் கனவுக் கன்னியாக நான்வருகிறேன். கதை என்னை வைத்துத்தான் நகரும்.

    நான் நடித்த மாயா (அதில் மகா கிளுகிளுப்பு காட்டியுள்ளார் நமிதா) ஹாலிவுட் படம்அல்ல. அது ஒரு ஆங்கிலப் படம். சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது என்றார்நமீதா.

    எல்லாப் படங்களிலும்கிளாமராகவே நடிக்கிறீர்களே என்ற கேள்விக்கு ரசிகர்கள்என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ, அப்படித் தானே நடிகக முடியும்?கவர்ச்சியும், காமெடியும்தான் இப்போதைய டிரண்டு. அவை இலலாமல் எப்படி படம்எடுக்க முடியும்.?.

    அதேசமயம வித்தியாசமான பாத்திரங்களிலும் நடிக்கத்தான் செய்கிறேன. ஒருபடத்தில் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறேனே என்றார்.

    நல்லவேளை, மன்சூர் அலிகான் இன்ஸ்பெக்டர் டிரஸ்ஸில் கோர்ட்டுக்குப் போனதுமாதிரி கமிஷனர் டிரஸ்ஸில் போலீஸ் ஆணையர் கமிஷனர் அலுவலகம் போகாமல்விட்டாரே நமீதா.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X