பாட்டில் மட்டுமே கிளாமர் - நயன்தாரா நம்ம நடிகைகள் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு ரெடிமேட் காரணத்தை எப்போதும் கையில் வைத்திருப்பார்கள்.ஏன் கவர்ச்சி காட்டுகிறீர்கள் என்று கேட்டால், நானா காட்டுகிறேன், ரசிகர்கள் விரும்புகிறார்கள், காட்டுகிறேன்என்று பட்டென்று கூறுவார்கள்.நயன்தாரா மட்டும் அதற்கு விதி விலக்காக இருக்க முடியுமோ? ஐயா படத்தில் வரும் ஒரு வார்த்தை சொல்லஒரு வருடம் காத்திருந்தேன் பாடலில் நயன்தாரவை அழகாக சேலையில் பார்த்து ரசித்த ரசிகர்கள் இனிமேல் சிக்உடையில், சிந்தும் கவர்ச்சியுடன் பார்க்கப் போகிறார்கள்.நளினமான கவர்ச்சி என்ற புதிய கொள்கைக்கு மாறியுள்ளார் நயன்தாரா. இழுத்துப் போர்த்திக் கொண்டு மட்டும்நடிக்க மாட்டேன். தேவைப்பட்டால் கவர்ச்சியிலும் கலக்குவேன் என்று தன்னை அணுகுவோரிடம் கூறி வருகிறார்நயன்தாரா.அது சரி, நயன், ஏன் இந்த திடீர் மாற்றம் என்று வல்லவன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அவரைக் கேட்டபோது,ஹோம்லியாக நடித்து வந்த நான் ஏன் கிளாமருக்கு மாறினேன் என்று என்னிடம் கேட்கிறார்கள். முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். மலையாளப் படங்களில் கிளாமர் காட்டி நடிக்க முடியாது. அப்படிநடித்தால் அவர்களுக்குவேறு இமேஜ் வந்து விடும்.ஆனால் தமிழ் அப்படி அல்ல. இங்கே கிளாமரையும் வெகு அழகாக காட்டுவார்கள். நம்மிடம் இருக்கும் அழகை, இன்னும் அற்புதமாக காட்டுவார்கள். அது எனக்குப் பிடித்திருக்கிறது. குறிப்பாகபாடல் காட்சிகள் தான் தமிழ் சினிமாவின் பலம். ரசிகர்களுக்கும் அந்தக் காட்சிகள் தான் மனசை ரிலாக்ஸ்ஆக்கிக் காள்ளும் இடம்.எனவே பாடல்களில் கிளாமராக நடிப்பதில் தவறே இல்லை. ரசிகர்கள் சந்தோஷம் தான் முக்கியம். அதை விடஅதிக செலவு செய்து எடுக்கும் பாடல் காட்சிகளில் கிளாமர் காட்டுவதில் தயக்கமே காட்டக் கூடாது என்பதுஎனது எண்ணம்.அதனால்தான் ஹோம்லியாக நடிக்கும் அதே நேரத்தில் கிளாமரிலும் நடிக்க நான் முடிவு செய்தேன்.அது சரி கள்வனின் காதலியில் எப்படி?மெல்லிய சிரிப்புடன், அய்யோ, நீங்கள் எதிர்பார்ப்பது போலெல்லாம் அதில் இருக்காது. பாடல் காட்சிகளில்கிளாமராக நடித்திருக்கிறேன். மறுக்கவில்லை. ஆனால் படம் முழுக்க நான் கிளாமராகத் தான் வருவேன் என்றுநீங்கள் எதிர்பார்த்தால் ஏமாந்து விடுவீர்கள். எதற்கும் ஒரு அளவு இருக்கு என்பது உங்களுக்கு தெரியும். அதே போல கிளாமருக்கும் ஒரு அளவுண்டு,மீறினால் திகட்டி விடும். முதல்ல படம் வரட்டும், பாருங்க, அப்புறம் திரும்பி என்னிடம் வந்து பேசுங்க.எல்லாம் சரி,வல்லவனில் இப்படி சிம்பு போட்டு கடித்து வைத்திருக்கிறாரே வலிக்கலையா? என்று கேட்டால்,அய்யோ அது வெறும் நடிப்பு தான். கடிக்கவெல்லாம் செய்யலை, கடிப்பது போல அவர் நடித்தார் என்றுபதறினார் நயன்தாரா. பரவாயில்லை கோலிவுட்டுக்கு வந்து நயன் நல்லா பேசக் கத்துக்கிட்டார்..

By Staff

நம்ம நடிகைகள் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு ரெடிமேட் காரணத்தை எப்போதும் கையில் வைத்திருப்பார்கள்.ஏன் கவர்ச்சி காட்டுகிறீர்கள் என்று கேட்டால், நானா காட்டுகிறேன், ரசிகர்கள் விரும்புகிறார்கள், காட்டுகிறேன்என்று பட்டென்று கூறுவார்கள்.

நயன்தாரா மட்டும் அதற்கு விதி விலக்காக இருக்க முடியுமோ? ஐயா படத்தில் வரும் ஒரு வார்த்தை சொல்லஒரு வருடம் காத்திருந்தேன் பாடலில் நயன்தாரவை அழகாக சேலையில் பார்த்து ரசித்த ரசிகர்கள் இனிமேல் சிக்உடையில், சிந்தும் கவர்ச்சியுடன் பார்க்கப் போகிறார்கள்.

நளினமான கவர்ச்சி என்ற புதிய கொள்கைக்கு மாறியுள்ளார் நயன்தாரா.

இழுத்துப் போர்த்திக் கொண்டு மட்டும்நடிக்க மாட்டேன்.

தேவைப்பட்டால் கவர்ச்சியிலும் கலக்குவேன் என்று தன்னை அணுகுவோரிடம் கூறி வருகிறார்நயன்தாரா.

அது சரி, நயன், ஏன் இந்த திடீர் மாற்றம் என்று வல்லவன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அவரைக் கேட்டபோது,ஹோம்லியாக நடித்து வந்த நான் ஏன் கிளாமருக்கு மாறினேன் என்று என்னிடம் கேட்கிறார்கள்.

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். மலையாளப் படங்களில் கிளாமர் காட்டி நடிக்க முடியாது. அப்படிநடித்தால் அவர்களுக்குவேறு இமேஜ் வந்து விடும்.


ஆனால் தமிழ் அப்படி அல்ல. இங்கே கிளாமரையும் வெகு அழகாக காட்டுவார்கள்.

நம்மிடம் இருக்கும் அழகை, இன்னும் அற்புதமாக காட்டுவார்கள். அது எனக்குப் பிடித்திருக்கிறது. குறிப்பாகபாடல் காட்சிகள் தான் தமிழ் சினிமாவின் பலம். ரசிகர்களுக்கும் அந்தக் காட்சிகள் தான் மனசை ரிலாக்ஸ்ஆக்கிக் காள்ளும் இடம்.

எனவே பாடல்களில் கிளாமராக நடிப்பதில் தவறே இல்லை. ரசிகர்கள் சந்தோஷம் தான் முக்கியம். அதை விடஅதிக செலவு செய்து எடுக்கும் பாடல் காட்சிகளில் கிளாமர் காட்டுவதில் தயக்கமே காட்டக் கூடாது என்பதுஎனது எண்ணம்.

அதனால்தான் ஹோம்லியாக நடிக்கும் அதே நேரத்தில் கிளாமரிலும் நடிக்க நான் முடிவு செய்தேன்.

அது சரி கள்வனின் காதலியில் எப்படி?

மெல்லிய சிரிப்புடன், அய்யோ, நீங்கள் எதிர்பார்ப்பது போலெல்லாம் அதில் இருக்காது.

பாடல் காட்சிகளில்கிளாமராக நடித்திருக்கிறேன். மறுக்கவில்லை.

ஆனால் படம் முழுக்க நான் கிளாமராகத் தான் வருவேன் என்றுநீங்கள் எதிர்பார்த்தால் ஏமாந்து விடுவீர்கள்.

எதற்கும் ஒரு அளவு இருக்கு என்பது உங்களுக்கு தெரியும். அதே போல கிளாமருக்கும் ஒரு அளவுண்டு,மீறினால் திகட்டி விடும். முதல்ல படம் வரட்டும், பாருங்க, அப்புறம் திரும்பி என்னிடம் வந்து பேசுங்க.

எல்லாம் சரி,வல்லவனில் இப்படி சிம்பு போட்டு கடித்து வைத்திருக்கிறாரே வலிக்கலையா? என்று கேட்டால்,அய்யோ அது வெறும் நடிப்பு தான். கடிக்கவெல்லாம் செய்யலை, கடிப்பது போல அவர் நடித்தார் என்றுபதறினார் நயன்தாரா.

பரவாயில்லை கோலிவுட்டுக்கு வந்து நயன் நல்லா பேசக் கத்துக்கிட்டார்..

More from Filmibeat

Read more about: i like glamour nayanatara
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X