Don't Miss!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அஜீத் போன்று பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது: நயன் புகழாரம்
சென்னை: அஜீத் குமார் போன்று பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
அஜீத் குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோர் நடித்துள்ள ஆரம்பம் வரும் 31ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அஜீத்துடன் ஏற்கனவே ஜோடி சேர்ந்த நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் தனது ஆரம்பம் ஹீரோ அஜீத் பற்றி நயன் கூறுகையில்,
நல்ல மனம் கொண்டவர்
அஜீத் குமார் போன்று ஒரு நல்ல மனமுள்ள நடிகரை என் அனுபவத்தில் நான் பார்த்தே இல்லை என்று நயன்தாரா தெரிவித்தார்.
படப்பிடிப்பில்
படப்பிடிப்புக்கு முன்னணி ஹீரோக்கள் வந்துவிட்டார்கள் என்றால் மற்றவர்களை காக்க வைத்துவிட்டு அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இயக்குனர்களும் அப்படித் தான் செய்வார்கள் என்று நயன் கூறினார்.
அஜீத்தோ
அஜீத் படப்பிடிப்புக்கு வந்தால் பிறரை வைத்து எடுக்கப்படும் காட்சிகள் எடுத்து முடிக்கப்படும் வரை பொறுமையாக காத்திருப்பார். காட்சிகள் நன்றாக வர வேண்டும் என்று நினைக்கும் அவர் யார் நடிப்பிலாவது குறை இருந்தால் டிப்ஸ் கொடுப்பார் என்றார் நயன்.
பெருந்தன்மை
முன்னணி ஹீரோவாக இருந்தும் மற்றவர்களின் காட்சிகள் படமாக்கப்படும் வரை காத்திருக்கம் பெருந்தன்மை அஜீத்தை தவிர வேறு யாருக்கும் வராது என்று நயன் கூறினார்.