நயன்தாரா நல்ல பொண்ணு... அவருடன் சேர்ந்து நடிப்பேன் - சிம்பு பேட்டி
நயன்தாரா நல்ல பொண்ணு, அவருக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது, என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.
சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நயன்தாரா - பிரபு தேவா பிரிவு குறித்து அவரிடம் கேட்டனர்.
அதற்கு பதிலளித்துள்ள சிம்பு, "நயன்தாரா நல்ல பொண்ணுதான். ஆனா, ஏன் அவங்களுக்கு இப்படியே நடக்குதுனு தெரியலை. அவங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும். அது போதும் எனக்கு,'' என்றவரிடம்,
நயன்தாராவுடன் நடிப்பீர்களா என்று கேட்டபோது, ''நானா தேடிப் போக மாட்டேன். கதைக்குத் தேவை இருந்தால், இயக்குநர் 'அவங்கதான் வேணும்'னு சொன்னா, நான் நடிக்கச் சம்மதிப்பேன்.
நடிப்பது என் தொழில். அதில் பெர்சனல் விஷயங்களைக் கொண்டுவரக் கூடாது,'' என்று கூறியுள்ளார்.
சிம்பு அடுத்து வேட்டை மன்னன், போடா போடி படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் போடா போடி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குமேல் இழுத்தடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











