Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பேய் படத்துல இருந்து எஸ்கேப் ஆகிட்டேன்.. நிசப்தம் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பேட்டி!
சென்னை: இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஓவியா நடிப்பில் வெளியான மெரினா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன்.
2012ம் ஆண்டு வெளியான அந்த படத்திற்கு இசையமைத்த "வணக்கம் வாழ வைக்கும் சென்னை" பாடலுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் புரொமோஷன் செய்து இருந்ததை இன்னமும் மறக்க முடியாது.
தற்போது நிசப்தம் படத்திற்கு இசையமைத்துள்ள கிரிஷ் தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி இரு பாகங்களாக வெளியாகி வைரலாகி வருகின்றன.
மெரினா, விடியுமுன், சதுரம் 2, கல்கி, அவள், இருட்டு, நிசப்தம் உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
கோபி சுந்தர் ஏற்கனவே அந்த படத்திற்கு இசையமைத்து முடித்த நிலையில், சில பிரத்யேக கலவைகளை சேர்க்க நிசப்தம் படத்தின் இயக்குநர் ஹேமந்த் மதுக்கர் இவரை அணுகியதாகவும், பத்து நாட்களில் எப்படி முடிக்கப் போகிறோம் என பயந்ததாகவும், இசை நன்றாக வரவேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் நிசப்தம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்ததாகவும் கூறியுள்ளார்.
அதன் பின்னர் கொரோனா லாக்டவுன் வந்து ஏகப்பட்ட மாதங்கள் தள்ளி வைக்கப்பட்ட வரும் அக்டோபர் 2ம் தேதி அனுஷ்கா, மாதவன், அஞ்சலி நடித்த நிசப்தம் படம் ரிலீசாக உள்ளது.
சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான அவள் மற்றும் சுந்தர்.சியின் இருட்டு படங்களுக்கு இசையமைத்த இவர், தற்போது பேய் படங்களில் இருந்து தப்பித்து உள்ளேன் எனக் கூறியுள்ளார்.
அடுத்ததாக நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் மற்றும் நெற்றிக்கண் படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.