Don't Miss!
- News சிக்கலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பேய் படத்துல இருந்து எஸ்கேப் ஆகிட்டேன்.. நிசப்தம் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பேட்டி!
சென்னை: இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஓவியா நடிப்பில் வெளியான மெரினா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன்.
2012ம் ஆண்டு வெளியான அந்த படத்திற்கு இசையமைத்த "வணக்கம் வாழ வைக்கும் சென்னை" பாடலுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் புரொமோஷன் செய்து இருந்ததை இன்னமும் மறக்க முடியாது.
தற்போது நிசப்தம் படத்திற்கு இசையமைத்துள்ள கிரிஷ் தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி இரு பாகங்களாக வெளியாகி வைரலாகி வருகின்றன.
மெரினா, விடியுமுன், சதுரம் 2, கல்கி, அவள், இருட்டு, நிசப்தம் உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
கோபி சுந்தர் ஏற்கனவே அந்த படத்திற்கு இசையமைத்து முடித்த நிலையில், சில பிரத்யேக கலவைகளை சேர்க்க நிசப்தம் படத்தின் இயக்குநர் ஹேமந்த் மதுக்கர் இவரை அணுகியதாகவும், பத்து நாட்களில் எப்படி முடிக்கப் போகிறோம் என பயந்ததாகவும், இசை நன்றாக வரவேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் நிசப்தம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்ததாகவும் கூறியுள்ளார்.
அதன் பின்னர் கொரோனா லாக்டவுன் வந்து ஏகப்பட்ட மாதங்கள் தள்ளி வைக்கப்பட்ட வரும் அக்டோபர் 2ம் தேதி அனுஷ்கா, மாதவன், அஞ்சலி நடித்த நிசப்தம் படம் ரிலீசாக உள்ளது.
சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான அவள் மற்றும் சுந்தர்.சியின் இருட்டு படங்களுக்கு இசையமைத்த இவர், தற்போது பேய் படங்களில் இருந்து தப்பித்து உள்ளேன் எனக் கூறியுள்ளார்.
அடுத்ததாக நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் மற்றும் நெற்றிக்கண் படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.