Just In
- 3 hrs ago
உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.. ரொம்ப நன்றி சார் கமலை சந்தித்த ரியோ.. டிவிட்டரில் உருக்கம்
- 5 hrs ago
என்னாது.. சுந்தர் .சியும் அங்கே வரப் போறாரா.. செம பரபரப்பு.. தலைவர்களுடன் தடாலடி சந்திப்பு!
- 5 hrs ago
அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை பார்த்தவன் – இயக்குநர் சுரேஷ் சண்முகம் பேட்டி!
- 8 hrs ago
கோடைக்காலம் தொடங்கிடுச்சுல்ல..பிகினியில் இன்ஸ்டாகிராமை அலறவிடும் வாரிசு நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!
Don't Miss!
- News
பிரதமரின் மோடியின் தாயாருக்கு எதிராக... தரக்குறைவான கருத்து... ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottBBC
- Automobiles
ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா!! ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு!!
- Finance
1 பில்லியன் டாலர் ஐபிஓ.. மாபெரும் திட்டத்துடன் களமிறங்கும் சோமேட்டோ..!
- Sports
இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு
- Lifestyle
மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சூது கவ்வும் பார்த்துட்டு கமல் சார் கூப்டாங்க.. அசோக் செல்வன் ஸ்பெஷல் பேட்டி!
சென்னை: காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி ஓ மை கடவுளே படம் ரிலீசாகிறது.
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது.

கெளதம் மேனன், இயக்குநர் கெளதம் மேனனாகவே இந்த படத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய்சேதுபதி கடவுள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக உருவாகி உள்ள ஓ மை கடவுளே படத்தின் நாயகன் அசோக் செல்வன், ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு இந்த பிரத்யேக பேட்டியை கொடுத்துள்ளார்.
சூது கவ்வும், தெகிடி, பிட்ஸா 2: வில்லா, சவாலே சமாளி மற்றும் கூட்டத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அசோக் செல்வன் நடிப்பில் செம்ம ரொமாண்டிக்காக ஓ மை கடவுளே படம் உருவாகி உள்ளது.
ஓ மை கடவுளே என்ற வார்த்தையை ஒவ்வொரு மனிதரும், துக்கம், சந்தோஷம், கோபம் என ஒவ்வொரு தருணங்களிலும் கூறி வருகின்றனர். இந்த டைட்டில் அது போன்ற ஒரு சூழ்நிலையில், படத்தின் திருப்பு முனையாக அமையும்.
சிறு வயதில் இருந்து நண்பர்களாக பழகி வரும் இருவரில், திடீரென ஒருவர் நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என கேட்க? அங்கே தொடங்கும் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும் தான் ஓ மை கடவுளே என நாயகன் அசோக் செல்வன் கூறியுள்ளார்.
மேலும், நடிகைகள் ரித்திகா சிங் குறித்தும், வாணி போஜன் குறித்தும் இந்த பேட்டியில் அசோக் செல்வன் மனம் திறந்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
விஜய்சேதுபதியின் சூது கவ்வும் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்ததை பார்த்து, அசோக் செல்வனை கமல் ஹாசன் நேரில் கூப்பிட்டு பாராட்டிய சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார். அது குறித்து தெரிந்து கொள்ள, இந்த வீடியோவை க்ளிக் செய்து கலகலப்பான அசோக் செல்வனின் அரட்டையை கண்டு ரசியுங்கள். வரும் காதலர் தினத்தன்று ரிலீசாகவுள்ள ஓ மை கடவுளே படத்தை தியேட்டரில் கண்டு மகிழுங்கள்!