எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. ’ஓ மை கடவுளே’ காயத்ரி கண்ணா கலகல பேட்டி!
Recommended Video

சென்னை: ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான ஓ மை கடவுளே படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
கடவுளாக விஜய்சேதுபதியும், தோழியை திருமணம் செய்து கொண்டு மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் கதாபாத்திரத்தில் அசோக் செல்வனும் அசத்தி உள்ளனர்.

அசோக் செல்வனின் தோழியாகவும், மனைவியாகவும் நடிகை ரித்திகா சிங் தனது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார்.
தெய்வமகள் சீரியலில் கலக்கி வந்த வாணி போஜன், கோலிவுட்டில் நாயகியாக இந்த படத்தின் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார்.
காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியான ஓ மை கடவுளே பலரது பாராட்டு மழையில், திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்த படத்தின் நாயகன் அசோக் செல்வன், நாயகிகள் ரித்திகா சிங், வாணி போஜன் மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்டோர் பிலிமி பீட்டுக்கு பேட்டி அளித்த நிலையில், தற்போது, இந்த படத்தில் காமெடியில் கலக்கிய நடிகர் சாராவுக்கு மனைவியாக நடித்த காயத்ரி கண்ணா ஸ்பெஷல் பேட்டி கொடுத்துள்ளார்.
ஓ மை கடவுளே படத்தில், பப்ளி கேர்ளாக சுவாதி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த காயத்ரி கண்ணா, தற்போது செம்ம ஸ்லிம்மாகி உள்ளார்.
ஏன் இப்படி திடீர்னு ஸ்லிம் ஆனிங்க என்ற கேள்விக்கு, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்கிற ரீதியில், சினிமாவில் தொடர்ந்து நடிக்கணும்னா, ஸ்லிம் ஆனா தான் பாஸ் சான்ஸ் கிடைக்கும் என கலகலப்பாக கூறினார்.
மேலும், ஓ மை கடவுளே படத்தில் நடிக்க தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது உள்ளிட்ட பல சுவாரஸ்ய தகவல்களையும் இயக்குநர் செல்வராகவன் கிட்ட எப்படி மொக்கை வாங்கினார் என்பது குறித்தும் நம்முடன் காயத்ரி கண்ணா பகிர்ந்துள்ளார். மேலே உள்ள வீடியோவை க்ளிக் செய்து முழுப் பேட்டியை கண்டு மகிழுங்கள்..


Click it and Unblock the Notifications











