Don't Miss!
- Sports ஐபிஎல் 2024 - சிஎஸ்கே பிளே ஆப் வாய்ப்பு பாதிப்பு.. புள்ளி பட்டியலில் கீழே சரிந்தது
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சாட்டை மாதிரி படத்தை நாங்க மட்டும்தான் எடுக்க முடியும் – பிரபு சாலமன்
படமும் பரவலாக பேசப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் இந்தப் படத்துக்கு கவுரவமான எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வந்திருப்பதும், மவுத் டாக் நன்றாக இருப்பதும் தயாரிப்பாளராக இயக்குநர் பிரபு சாலமனை சந்தோஷப்பட வைத்துள்ளது.
எப்படி இந்த ஸ்கிரிப்டை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டபோது, "அன்பழகன் என் உதவி இயக்குநர்தான். மைனா சமயத்திலேயே இந்த ஸ்கிரிப்டை சொன்னார். நிச்சயம் பண்ணலாம் என்று சொன்னேன். இந்தக் கதையை எழுதும்போதே, தயாளன் என்ற பாத்திரத்துக்கு சமுத்திரக்கனியை மனதில் வைத்துதான் எழுதியதாகச் சொன்னார்.
சமுத்திரக்கனியிடம் விஷயத்தைச் சொன்னதும்.. 'இது நாம சேர்ந்து பண்ண வேண்டிய படம். இந்த மாதிரி ஒரு படத்தை நம்ம மாதிரி இயக்குநர்கள்தான் சேர்ந்து பண்ண முடியும்' என்றார்.
அவர் சொன்னது உண்மைதான். எங்களை மாதிரி இயக்குநர்கள் மனது வைத்தால் சாட்டை மாதிரி நிறை படங்கள் நிறைய வரும்," என்றார்.
வரணும் வரணும்... தமிழ் சினிமாவுக்கு அது நல்ல அந்தஸ்தைப் பெற்றுத் தரணும்!