Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காமெடிக்கு மாறியது ஏன்? - சொல்கிறார் ஊர்வசி
முந்தானை முடிச்சு மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. தொடர்ந்து பல வெற்றிப் படங்களின் நாயகியாக வலம் வந்தவர், திடீரென காமெடி ரூட்டைப் பிடித்தார்.
மைக்கேல் மதன காமராஜன், வனஜா கிரிஜா, இரட்டை ரோஜா, மகளிர் மட்டும் படங்களில் ஹீரோயின் மற்றும் காமெடி வேடங்களில் கலக்கினார்.
ஒரு இடைவெளிக்குப்பிறகு, அவர் அம்மா வேடங்களில் நடித்தார். ஆனால் அதிலும் நகைச்சுவையே பிரதானமாக அமைந்ததால் நல்ல வரவேற்பு கிடைத்தது.
உதாரணம், வாமனன், சிவா மனசுல சக்தி.
இப்போது, பேச்சியக்கா மருமகன் படத்தில் நடித்து வருகிறார். இதில் தருண் கோபிக்கு மாமியாராக நடித்துள்ளார் ஊர்வசி. மலையாளம் தாய்மொழி என்றாலும், மதுரைத் தமிழ் பேசி நடித்துள்ளார் ஊர்வசி.
தனது சினிமா அனுபவம், நகைச்சுவைக்கு மாறியது குறித்து அவர் கூறுகையில், "400 படங்களில் கதாநாயகியாக நடித்த பின் நகைச்சுவை வேடம் விட்டேன். அதன்பிறகு நகைச்சுவை வேடங்களிலும், குணச்சித்ர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறேன். நகைச்சுவையாக நடிப்பது ஏன்? என்று நிறைய பேர் கேட்கிறார்கள்.
நகைச்சுவை நடிப்பில், ஆச்சி மனோரமாவுடன் வேறு யாரையும் ஒப்பிட முடியாது. அவருடைய இடத்தை யாரும் நிரப்ப முடியாது. பொதுவாகவே சினிமாவில் பெண்கள் நகைச்சுவை வேடங்களில் நடிப்பது, குறைவாக இருக்கிறது.
கதாசிரியர்கள், பெண்கள் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகள் எழுதுவதில்லை. எனக்கு 'மாயாபஜார்,' வனஜா கிரிஜா,' இரட்டை ரோஜாக்கள்' ஆகிய படங்கள் திருப்பமாக அமைந்தன. மைக்கேல் மதன காமராஜன்,' மகளிர் மட்டும்' படங்களுக்கு கிடைத்த வரவேற்பு, நகைச்சுவை வேடங்களில் நடிப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தின.
இடையில், கொஞ்ச காலம் படங்களில் நடிப்பதை தவிர்த்தேன். 'பேச்சியக்கா மருமகன்' படம், தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை தந்திருக்கிறது," என்றார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!