ஓபன் பத்மா! பத்மப்பிரியாவை தமிழில் காண முடியவில்லையே என்று ரசிகர்கள் கவலைப்படவேண்டாம். அம்மணி இப்போது மலையாளத்தில் பிசியாக இருக்கிறாராம்.தவமாய் தவமிருந்து நாயகி பத்மப்பிரியா முதல் படத்தில் நடிப்பில் ரசிகர்களைக்கொள்ளை கொண்டார். இரண்டாவது படமான பட்டியலில் கிளாமரில் ரசிகர்களைகொள்ளையடித்தார். அத்தோடு சரி, பத்மப்பிரியாவை காணவில்லை.நடித்தது இரண்டு படங்களில்தான் என்றாலும் 20 படங்களில் நடித்த அனுபவசாலிபோல ரொம்பத்தான் பேசுகிறார் பத்மப்ரியா. தத்துப் பித்தென்று தத்துவங்களைகொட்டிக் கவிழ்க்கும் பத்மா ரொம்ப ஓபன் டைப்.எதையும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக பேசி விடுகிறார். இதுவே அவரதுபின்னடைவுக்கு முக்கிய காரணமாகி விட்டது.பட்டியல் கதையை அவர் முதலில் சேரனிடம் கூறி யோசனை கேட்டாராம். கிளாமர்காட்டி நடிக்கப் போவதாக அவர் கூறியபோது, சேரன் வேண்டாம் என்று அட்வைஸ்செய்தாராம். ஆனால் பத்மாதான் கேட்கவில்லை.இல்லை, இல்லை எடுபடும் என்று சேரனையே கன்வின்ஸ் செய்யப் பார்த்தாராம். சரிஎப்படியோ போ என்று சேரன் ஒதுங்கிக் கொண்டார். பட்டியலில் அவர் கிளாமரில் பட்டையைக் கிளப்பியது மார்க்கெட்டைஉயர்த்துவதற்குப் பதில் அவருடை கேரக்டரை ரிப்பேராக்கி விட்டது.பத்மாவை மையமாக வைத்து ஏகப்பட்ட வதந்திகள். ஆர்யாவுடன் அங்கே இங்கேசுற்றுகிறார் என்று செய்திகள் வர ஆரம்பித்தன. மண்டைக்கணமாக பேசுவார், வாயாடிப் பொண்ணு என்று சிறப்பு செய்திகளும்கூடவே வர பத்மாவின் மார்க்கெட் டார் டாராகி விட்டது.இப்போது தமிழில் கையில் இருப்பது வசந்த் இயக்கத்தில் உருவாகும் சத்தம்போடாதே படம் மட்டும்தான்.ஆனால், தனது மார்க்கெட் சரிந்துவிட்டதாகக் கூறுவகை பத்மா ஏற்க மறுக்கிறார்.மலையாளத்தில் நான் பிசியாக நடித்து வருகிறேன். அதனால்தான் தமிழில் பார்க்கமுடியவில்லை.மலையாளத்தில் ப்ருத்விராஜுடன் ஒரு படம் செய்கிறேன். அதில் என்னோட கேரக்டர்ரொம்ப அருமையானது. வித்தியாசமாக செய்து வருகிறேன்.பட்டியலில் நான் கிளாமர் செய்ததாக கூறுகிறார்கள். அந்தக் கேேரக்டருக்குஅப்படித்தான் நடிக்க வேண்டும். அதனால்தான் அப்படிச் செய்தேன். அதில் ஆபாசம்இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.கண்ணுமண்ணு தெரியாமல் டான்ஸ் ஆடும்போது டிரஸ் எல்லாம் ஒதுங்கி கொஞ்சம்கிளாமராகத்தான் காட்டும். அப்படித்தான் ஒரு பாட்டுக் காட்சியில் நான்ஆடியிருந்தேன். அதைப் போய் ஓவர் கிளாமர் என்று கூறலாமா? என்கிறார் பத்மா.தொடர்ந்து அவரே, நடிப்பு என்று வந்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கத்தயாராக இருக்க வேண்டும். கொடுத்த கேரக்டரில் தூள் கிளப்ப வேண்டும். அதுதான்எனது பாலிஸி என்று தன்னிலை விளக்கமும் கொடுக்கிறார்.இன்னும் சில படங்களில் நடித்து விட்டு டைரக்ஷன் பக்கம் போகப் போகும்திட்டத்தில் இருக்கிறாராம் பத்மா. அதற்காக ஏகப்பட்ட டெக்னிக்கல் விஷயங்களைகற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.தமிழில் குறைச்சலாக நடித்தாலும் சேலை, நகை என ஏகப்பட்ட விளம்பரப்படங்களில் பத்மப்ரியா தான் இருக்கிறார். இதில் அடுத்த இடத்தை பிடித்திருப்பதுஸ்னேகா.மாடலிங் மூலமாக சினிமாவுக்கு வரும் முன் பத்மா என்ன செய்து கொண்டிருந்தார்தெரியுமோ?பெங்களூரில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்தாராம்.

By Staff
பத்மப்பிரியாவை தமிழில் காண முடியவில்லையே என்று ரசிகர்கள் கவலைப்படவேண்டாம். அம்மணி இப்போது மலையாளத்தில் பிசியாக இருக்கிறாராம்.

தவமாய் தவமிருந்து நாயகி பத்மப்பிரியா முதல் படத்தில் நடிப்பில் ரசிகர்களைக்கொள்ளை கொண்டார். இரண்டாவது படமான பட்டியலில் கிளாமரில் ரசிகர்களைகொள்ளையடித்தார். அத்தோடு சரி, பத்மப்பிரியாவை காணவில்லை.

நடித்தது இரண்டு படங்களில்தான் என்றாலும் 20 படங்களில் நடித்த அனுபவசாலிபோல ரொம்பத்தான் பேசுகிறார் பத்மப்ரியா. தத்துப் பித்தென்று தத்துவங்களைகொட்டிக் கவிழ்க்கும் பத்மா ரொம்ப ஓபன் டைப்.

எதையும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக பேசி விடுகிறார். இதுவே அவரதுபின்னடைவுக்கு முக்கிய காரணமாகி விட்டது.

பட்டியல் கதையை அவர் முதலில் சேரனிடம் கூறி யோசனை கேட்டாராம். கிளாமர்காட்டி நடிக்கப் போவதாக அவர் கூறியபோது, சேரன் வேண்டாம் என்று அட்வைஸ்செய்தாராம். ஆனால் பத்மாதான் கேட்கவில்லை.

இல்லை, இல்லை எடுபடும் என்று சேரனையே கன்வின்ஸ் செய்யப் பார்த்தாராம். சரிஎப்படியோ போ என்று சேரன் ஒதுங்கிக் கொண்டார்.

பட்டியலில் அவர் கிளாமரில் பட்டையைக் கிளப்பியது மார்க்கெட்டைஉயர்த்துவதற்குப் பதில் அவருடை கேரக்டரை ரிப்பேராக்கி விட்டது.

பத்மாவை மையமாக வைத்து ஏகப்பட்ட வதந்திகள். ஆர்யாவுடன் அங்கே இங்கேசுற்றுகிறார் என்று செய்திகள் வர ஆரம்பித்தன.

மண்டைக்கணமாக பேசுவார், வாயாடிப் பொண்ணு என்று சிறப்பு செய்திகளும்கூடவே வர பத்மாவின் மார்க்கெட் டார் டாராகி விட்டது.

இப்போது தமிழில் கையில் இருப்பது வசந்த் இயக்கத்தில் உருவாகும் சத்தம்போடாதே படம் மட்டும்தான்.

ஆனால், தனது மார்க்கெட் சரிந்துவிட்டதாகக் கூறுவகை பத்மா ஏற்க மறுக்கிறார்.மலையாளத்தில் நான் பிசியாக நடித்து வருகிறேன். அதனால்தான் தமிழில் பார்க்கமுடியவில்லை.

மலையாளத்தில் ப்ருத்விராஜுடன் ஒரு படம் செய்கிறேன். அதில் என்னோட கேரக்டர்ரொம்ப அருமையானது. வித்தியாசமாக செய்து வருகிறேன்.

பட்டியலில் நான் கிளாமர் செய்ததாக கூறுகிறார்கள். அந்தக் கேேரக்டருக்குஅப்படித்தான் நடிக்க வேண்டும். அதனால்தான் அப்படிச் செய்தேன். அதில் ஆபாசம்இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கண்ணுமண்ணு தெரியாமல் டான்ஸ் ஆடும்போது டிரஸ் எல்லாம் ஒதுங்கி கொஞ்சம்கிளாமராகத்தான் காட்டும். அப்படித்தான் ஒரு பாட்டுக் காட்சியில் நான்ஆடியிருந்தேன். அதைப் போய் ஓவர் கிளாமர் என்று கூறலாமா? என்கிறார் பத்மா.

தொடர்ந்து அவரே, நடிப்பு என்று வந்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கத்தயாராக இருக்க வேண்டும். கொடுத்த கேரக்டரில் தூள் கிளப்ப வேண்டும். அதுதான்எனது பாலிஸி என்று தன்னிலை விளக்கமும் கொடுக்கிறார்.

இன்னும் சில படங்களில் நடித்து விட்டு டைரக்ஷன் பக்கம் போகப் போகும்திட்டத்தில் இருக்கிறாராம் பத்மா. அதற்காக ஏகப்பட்ட டெக்னிக்கல் விஷயங்களைகற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

தமிழில் குறைச்சலாக நடித்தாலும் சேலை, நகை என ஏகப்பட்ட விளம்பரப்படங்களில் பத்மப்ரியா தான் இருக்கிறார். இதில் அடுத்த இடத்தை பிடித்திருப்பதுஸ்னேகா.

மாடலிங் மூலமாக சினிமாவுக்கு வரும் முன் பத்மா என்ன செய்து கொண்டிருந்தார்தெரியுமோ?

பெங்களூரில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்தாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X