பாகுபலி.. சாஹோக்கு அப்புறம் என் படம் தான்.. அதுக்கு காரணம்.. மனம் திறக்கும் பெண்குயின் இயக்குநர்!
சென்னை: பொன்மகள் வந்தாள் படத்திற்கு பிறகு அடுத்த ஒரு தமிழ் சினிமா இன்னும் 3 நாட்களில் தமிழ் ரசிகர்களை திகைப்பூட்ட வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள பெண்குயின் படம் அமேசான் பிரைமில் வரும் ஜூன் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் அளித்துள்ள பிரத்யேக பேட்டி வைரலாகி வருகிறது.
சர்கார் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் கீர்த்தி சுரேஷ் என்ட்ரி கொடுக்க உள்ள நிலையில், பெண்குயின் படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
பெண்குயின் படத்தில் வரும் (மேடி) கருப்பு நிற நாய், இயக்குநரின் சொந்த நாய்க்குட்டி என்ற ரகசிய தகவலையும் பகிர்ந்துள்ளார்.
ராட்சசன் படம் போல இருக்கிறது, சார்லி சாப்ளின் மாஸ்க் என பல விசயங்களையும் பேசிய ஈஸ்வர் கார்த்திக், சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் பாகுபலி, சாஹோ படங்களின் டிரைலருக்கு அடுத்தபடியாக பெண்குயின் டிரைலர் சாதனை படைத்திருக்கிறது தனக்கு கிடைத்த பெருமை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பெண்குயின் என்ற டைட்டிலை ஏன் இந்த படத்திற்கு வைத்தேன் என்கிற சூப்பரான தகவலையும் ஈஸ்வர் கார்த்திக் அவரது ஸ்டைலில் பேசி இருப்பதை வீடியோவில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!


Click it and Unblock the Notifications











