Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பீகார் பெண்ணுடன் பிரபுதேவாவுக்கு நடந்த திருமணம்.. ஜெயந்தி கண்ணப்பன் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
சென்னை: கடந்த 2020ம் ஆண்டு லாக்டவுனில் நடிகர் பிரபுதேவா பீகார் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார் என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில், பிரபுதேவாவுக்கும் பீகாரை சேர்ந்த ஹிமானி சிங் என்பவருடன் நடந்த திருமணம் பற்றி உறுதி செய்துள்ளார் ஜெயந்தி கண்ணப்பன்.
தமிழ் பிலிமிபீட்டுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் பிரபுதேவாவுக்கும் ரமலத்துக்கும் நடைபெற்ற திருமணம் பற்றியும், ஹிமானி சிங்குடன் அவருக்கு நடந்த திருமணம் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.
தொடர்ந்து 5 படங்கள் பிளாப்…வேதனையில் பிரபுதேவா..பஹிரா படம் கைக்கொடுக்குமா?
நடனம், நடிப்பு, இயக்கம்
நடனம், நடிப்பு, இயக்கம் என இந்தியா முழுவதும் இன்னமும் அசத்தி வருகிறார் நடிகர் பிரபுதேவா. இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் பிரபுதேவாவின் நடிப்பில் சமீபத்தில் மைடியர் பூதம் திரைப்படம் வெளியாகி குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. பஹீரா, வினோதன் என ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா.
முதல் மனைவி
பிரபுதேவா தனது டான்ஸ் ட்ரூப்பில் டான்ஸராக பணியாற்றி வந்த ரமலத் என்பவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக அவரை 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், 2011ம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார். பிரபலங்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வரும் ஜெயந்தி கண்ணப்பன் முதல் மனைவியை திருமணம் செய்து கொண்டதும் தன்னிடம் வந்தது பற்றியும் அவருக்கு கடந்த 2020ல் நடந்த திருமணம் பற்றியும் ஏகப்பட்ட விஷயங்களை பேசியுள்ளார்.
என்னிடம் தான் வந்து நின்றார்
ரமலத் எனும் இஸ்லாமிய பெண்ணை காதலிக்கிறேன் என இதே இடத்தில் இரவு நேரத்தில் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு என்னிடம் தான் வந்து நின்றார் பிரபுதேவா என பேசியுள்ளார். குஷ்பு நடனமாடிய எட்டுப்பட்டி ராசா பாட்டில் ரமலத் முதல் வரிசையில் நின்று நடனமாடியிருப்பார். சிறப்பான நடனக் கலைஞர் அவர், என பாராட்டி பேசியுள்ளார்.
பீகார் பெண்ணுடன் திருமணம்
வில்லு படத்தின் ஷூட்டிங்கின் போது நயன்தாராவை காதலித்து வந்த பிரபுதேவா, திருமணம் வரை சென்ற நிலையில், கடைசி நேரத்தில் அவரது திருமணத்துக்கு ரமலத் தடையாக நின்று பிரச்சனை செய்தார். இந்நிலையில், லாக்டவுன் சமயத்தில் கடந்த 2020ம் ஆண்டு பீகாரை சேர்ந்த டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டு பிரபுதேவா வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அது உண்மை தான் என ஜெயந்தி கண்ணப்பன் தனது பேட்டியில் உறுதி செய்துள்ளார்.