Don't Miss!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சந்திப்போமா?
நல்ல கதை கிடைத்தால், தந்தையுடன் சேர்ந்து நடிப்பேன் என நடிகர் பிரசாந்த் தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களிடம் அவர் பேசியபோது தெரிவித்ததாவது:
சினிமாவில் நடிப்பது எளிதான காரியம் அல்ல. சொல்லப் போனால் எனது குடும்பத்தில் எனது தந்தை (தியாகராஜன்) நடித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் அவரால் தொடர்ந்து நடிக்க இயலவில்லை. நான் நடிக்க வந்த பிறகு, அவர் சினிமாவை விட்டு விலகி விட்டார். ஆனால் நல்ல கதை கிடைத்தால்இருவரும் இணைந்து நடிப்போம். அதற்கான கதையைத் தேடிக் கொண்டுள்ளோம்.
கூட்டுக்குடும்பம்:
விஜய்காந்த் நடிகர் சங்கத் தலைவரான பிறகு சினிமாத் துறையில் உள்ள அனைவரும் ஒரு கூட்டுக் குடும்பமாக மாறி விட்டோம். இது ஒரு பெரியதொழிற்சாலையைப் போன்றது. பெரிய நடிகர், சிறிய நடிகர் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது.
சம்பள குறைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்பட்டு நடப்பேன். டி.வி ஆதிக்கத்தால்,சினிமாவிற்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. இன்றும் நல்ல படங்கள் நூறு நாட்கள் ஓடுகின்றன.
தற்போது நான் பிரியாத வரம் வேண்டும்., ஸ்டார்., சாக்லெட்., விரும்புகிறேன், ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். விரும்புகிறேன் படத்தில் தீயணைப்புவீரனாக நடிக்கிறேன். இதில் தீயணைப்பு வீரர்களின் கஷ்டங்களை உணர்த்தியுள்ளேன். இப்படம் எனக்கு நல்ல பெயரை ஈட்டித் தரும் என நம்புகிறேன்.
வெளிநாடுகளில் உள்ள டாக்டர்கள், இன்ஜினியர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்த அழைக்கின்றனர். அவர்களின் அழைப்பை ஏற்று நான் அங்கு சென்றுநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.
காதல் திருமணமா? நோ சான்ஸ்:
நான் காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் செய்துகொள்ளும் முன்பு சினிமாவில் சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
இவ்வாறு நடிகர் பிரசாந்த் தெரிவித்தார்.