Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வேற மாதிரி இருந்தேன்.. மாஃபியாவுக்கு அப்புறம் நிறைய நட்பு.. பிரியா பவானி சங்கர் ஹேப்பி!
Recommended Video
சென்னை : மாஃபியா படத்திற்கு முன் நான் வேறு மாதிரி இருந்தேன், தற்போது நான் வேறு மாதிரி இருக்கிறேன். ஏனெனில் மாஃபியா படம் மூலம் பல நல்ல மனிதர்களின் நட்பு கிடைத்துள்ளது என பிரியா பவானி சங்கர் கூறியினார்.
நடிகர் அருண்விஜய் நடிப்பில் பிப்ரவரி 21 வெளியாக இருக்கும் படம் தான் மாஃபியா இந்த படத்தை துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து உள்ளார். படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. படத்தில் அருண்விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழு பல நேர்காணல்களையும் பல்வேறு பேட்டிகளையும் கொடுத்து வருகின்றனர். இந்த பேட்டிகளின் போது பிரியா பவானி சங்கர் தனது பட அனுபவத்தை பற்றிய பல விசயங்களை பகிர்ந்து கொண்டார்.
பிரியா பவானி சங்கர் ஒரு இடத்தில் கூறும் போது மாஃபியா படத்திற்கு முன் நான் இருந்தததே வேறு தற்போது நான் வேறு மாதிரி இருக்கிறேன். நிறைய மாற்றங்களை மாஃபியா படம் என்னுள் ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் மூலம் பல நல்ல மனிதர்களின் நட்பு கிடைத்துள்ளது.
மாஃபியா படத்தில் அருண்விஜய் நாயகனாகவும் பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் தான் இவர்கள் இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்துள்ளனர். அருண்விஜய் மற்றும் பிரசன்னா இருவரும் விட்டகொடுக்காத நடிகர்கள் என பிரியா கூறியுள்ளார். இருவரும் சரிசமான நடிப்பை கொடுத்துள்ளனர் என்று கூறினார்.
இந்த படத்தின் இயக்குனருக்கு இது மூன்றாவது படமாகும், ஆனால் முன்னோட்டங்களை பார்க்கும் போது எந்த ஒரு சிறு குறைகளும் இல்லாத அளவில் படத்தை அசத்தலாக எடுத்திருப்பது தெரிகிறது. கார்த்திக் நரேன் பற்றி கூறும் போது ஒரு ஷாட்டை கூட கார்த்திக் நரேன் வீணாக எடுக்கவில்லை எனறார். இதை தான் வேறு ஒரு பேட்டியில் பிரசன்னாவும் கூறியிருத்தார். இந்த மாதிரியான இயக்குனர்கள் தயாரிப்பாளர்களின் பட்ஜெட்களை பல மடங்கு சேமித்து விடுவார்கள்.
அருண்விஜய் பல போராட்டங்களுக்கு பிறகே தற்போது தொடர் வெற்றிகளை சுவைத்து வருகிறார். அருண் விஜய் இத்தகைய வெற்றியை பெருவதற்கு முதல் காரணம் அவரின் பொருமை தான் என்று பிரியா கூறியுள்ளார். இத்தனை வருட கால பொருமை தான் இவரை உயரத்திற்கு ஏற்றியுள்ளது என கூறினார்.
நடிகர் அருண்விஜய் அடுத்ததாக பாக்ஸர் படத்தில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர் அடுத்ததாக இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரியா பொம்மை படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் மீண்டும் ஜோடியாக நடித்து வருகிறார்.