Don't Miss!
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஃபஹத் ஃபாசில், ராஷ்மிகா, அல்லு அர்ஜுன்... புஷ்பா ஓடிடி பற்றி ஸ்பெஷல் பேட்டி
சென்னை: அல்லு அர்ஜுன் நடித்த பரபரப்பான மெய்சிலிர்க்க வைக்கும் சண்டைக்காட்சிகள் நிறைந்த தெலுங்கு திரைப்படம் புஷ்பா தி ரைஸ் - பார்ட் 1 இன் சிறப்பு வீடியோ ஸ்ட்ரீமிங் ஒளிபரப்பை அறிவித்தது.
சுகுமார் எழுதி இயக்கிய இந்த திரைப்படத்தை ஜனவரி 7 ஆம் தேதி முதல், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் 240 நாடுகள் மற்றும் எல்லைப்பகுதியிலும் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிரைம் உறுப்பினர்கள் காணமுடியும்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியாவின் கூட்டுத் தயாரிப்பில் உருவான மெய்சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தில் கதை நாயகனாக அல்லு அர்ஜூன் தோன்றுகிறார், அவரோடு ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹாத் ஃபாசில் ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள்.
ஓடிடியில் வெளியாகும் புஷ்பா.. வெளியானது ரிலீஸ் தேதி!
ஜனவரி 7 ஆம் தேதி
இந்த தெலுங்கு சண்டைத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவும் மிக முக்கியமான லீட் ரோலில் நடித்திருக்கிறார், அது மட்டும் அல்லாமல் குறிப்பிடத்தக்க பிரபல மலையாள மற்றும் தமிழ் திரைப்பட நடிகரான ஃபஹாத் ஃபாசில் தெலுங்கில் அறிமுகமாகும் படமாகவும் அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தின் முதல் சிறப்புக் காட்சி ஜனவரி 7 ஆம் தேதி பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் ஒளிபரப்பாகும்.
செம்மரக் கட்டை கடத்தல்
புஷ்பா தி ரைஸ் - பார்ட் 1 ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள சேஷாசலம் காட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவிச்செல்லும் கிளர்ச்சி மிக்க, மெய்சிலிர்க்க வைக்கும் தீவிரமான கட்டுப்பாடற்ற பயணத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. இதில் புஷ்பராஜ் என்ற லாரி ஓட்டுநர் பாத்திரத்தில் தோன்றும் அல்லு அர்ஜுன் செம்மரக்கட்டை கடத்தல் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். இந்தப் பகுதிகளில் மிக அதிகளவில் நடைபெற்றுவரும் செம்மரக் கட்டை கடத்தல் தொழிலில் ஈடுபட்டுவரும் கடத்தல்காரர்களின் சாம்ராஜ்யத்தை தகர்க்க காவல்துறையினர் மேற்கொள்ளும் முயற்சிகளின் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இடையிலான போராட்ட வரலாறை இது சித்தரிக்கிறது.
மக்கள் கூட்டம் அலைமோதியதை
விறுவிறுப்பான, சிந்தனையைத் தூண்டும் இந்தக் கதைக்களம், நல்லது அல்லது கெட்டதை பிரித்துப் பார்க்க இயலாத ஒரு சுழலுக்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறது. அங்கே தீய மனிதர்கள் என்று ஒருவருமில்லை அவர்கள் அனைவருமே பல்வேறு சாயல் கொண்ட கதாநாயகர்கள்தான். ரசிகர்கள் மற்றும் திரைப்படத்துறையினரின் ஒட்டுமொத்த பாராட்டையும் இந்தத் திரைப்படம் அள்ளிக் கொண்டது . இந்த படம் வெளியிடப்பட்ட முதல் நாளன்று, அல்லு அர்ஜூன் மற்றும் ஃபஹாத் ஃபாசில் ரசிகர் பட்டாளம் ஒன்று திரண்ட மக்கள் கூட்டம் அலைமோதியதை இந்தியாவெங்கிலுமுள்ள அரங்கு நிறைந்த திரையரங்குகளில் காணமுடிந்தது.
வீடியோ கன்டென்ட் லைசென்ஸிங் தலைவர்
சாகசக்காட்சிகள் நிறைந்த புஷ்பா தி ரைஸ் - பார்ட் 1 பொழுதுபோக்குத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சித் திரையை (வீடியோ ஸ்ட்ரீமிங்கை) பிரைம் வீடியோவில், வெளியிடுவதன் மூலம் இந்தப் புதிய வருடத்திற்கான ஒரு சந்தோஷமான தொடக்கத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவது குறித்து நாங்கள் உற்சாகமடைந்திருக்கிறோம்." என்று, இந்தியாவின் பிரைம் வீடியோ கன்டென்ட் லைசென்ஸிங் தலைவர், மெங்க்னானி கூறினார். "உள்ளூர் மொழிகளில் எங்களது பரந்த உள்ளடக்கத்தோடு கூடிய கலைப் பங்களிப்பு தொகுதியில் கூடுதலாக ஒரு புதிய படம் இந்த புஷ்பா . புது பாதை அமைத்து அதிக விறுவிறுப்பான ரசிகர்களை திரைப்படம் தொடக்கத்திலிருந்து இறுதிவரை எங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என்பது உறுதி. அல்லு அர்ஜூன், ஃபஹாத் ஃபாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா போன்ற மிகப் பெரிய முன்னணி நடிகர்கள் தோன்றும் இந்தத் திரைப்படம் அவர்களின் மிகச்சிறந்த நடிப்பாற்றலால் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. சாகசம் நிறைந்த இந்த மிகப்பிரம்மாண்டமான திரைப்படத்தை உலகம் முழுவதிலுமுள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்".
பார்வையாளர்கள் பாராட்டி
திரைப்படத்தை எழுதி இயக்கிய சுகுமார் அனுபத்தை சொல்லிய போது " முதலில் ரசிகர்களுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கு அவர்கள் அளித்த அன்பு மற்றும் ஆதரவுக்காகவும் நன்றி. இந்தத் திரைப்படத்தை ஒரு வெற்றிக் காவியமாக ஆக்கியதற்காகவும் என் மனப்பூர்வமான நன்றியயைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்தியாவின் இதயமாக விளங்கும் ஒரு இடத்தில் அமைக்கப்பட்டது. நெருக்கடி மிகுந்த கடும் போட்டி நிலவும் சந்தன செம்மரக் கட்டை கடத்தல் உலகத்தின் உள்ள எல்லா பார்வையாளர்களையும் நடத்திச்செல்லவேண்டும் என்ற எண்ணம் சில நாட்களாகவே என் மனதை ஆக்கிரமித்திருந்தது. இந்தத் திரைப்படம் நல்லது மற்றும் கெட்டது என்ற விழுமியங்களை தாண்டி அதை விட்டு விலகிச்சென்று, மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு அதிவிரைவு ரோலர் கோஸ்டர் சாகச அனுபவத்தை அளிக்கும் கதைக் களமாக இருப்பதை பார்வையாளர்கள் பாராட்டி ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இதன் அழுத்தமான கதை மற்றும் திறமையான கலைஞர்களின் மிகச்சிறப்பான நடிப்பாற்றலோடு கூடிய இதை கண்டிப்பாக பார்த்து ஆழ்ந்து ரசிக்க வேண்டிய ஒரு திரைப்படமாக உலகெங்கிலுமுள்ள பார்வையாளர்களுக்கு விளங்கச்செய்யும் என்பது உறுதி." என்று இயக்குனர் பெருமையாக பேசினார் .
அல்லு அர்ஜுன்
இந்தத் திரைப்படத்தில் தான் பங்கேற்ற பாத்திரம் குறித்து பகிர்ந்து கொண்டு அல்லு அர்ஜூன் , "கதையைப் படித்து முடித்த அந்த கணமே, அது எனக்கு மிகவும் பொருத்தமானதாக உணர்ந்தேன். சமூகத்தில் கீழ் நிலையில் இருந்து உயர்ந்து மேல் நிலையை அடையும் ஒருவனின் கதை பழைய சலித்துப் போன ஒன்றாகத் தோன்றலாம், ஆனால் இந்தத் திரைப்படத்தில் அவனது பயணம் விவரிக்கப்பட்டிருக்கும் விதம், மற்றும் அவன் பாத்திரத்துக்கு மெருகூட்டும் குணநலனின் பல அடுக்குகள் நுட்பமான உணர்வுகள் என்று மிகவும் தனித்துவமானவை. என் தொழில் வாழ்க்கையில் இதற்கு முன் நான் எப்போதும் செய்திராதவை. இந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்குவதில் நான் பெருமைப்படுகிறேன் என்பதை புறிந்து முற்றிலும் உற்சாகமடைந்திருக்கிறேன்."
ராஷ்மிகா
"பார்வையாளர்கள் இந்தத் திரைப்படத்தை மிக உயர்வாக பாராட்டுவதை காணும்போது, மாதக்கணக்காக மேற்கொண்ட கடின உழைப்பு மற்றும் பயிற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது என்பதை நான் அறிந்து கொண்டேன்." என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்தார்," அல்லு அர்ஜூன் மற்றும் ஃபஹாத் ஃபாசில் போன்ற நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடிப்பது என்னைப் பொறுத்த வரையில் மிக முக்கியமான ஒன்றாகத் தோன்றுகிறது. கதையின் தனித்துவமான போக்கு ,அதை வலிமையாக எடுத்துச் சொன்ன விதம், பன்முகத்தன்மை கொண்ட பாத்திரப்படைப்புக்கள் இதை உருவாக்கியவர்கள் இந்த திரைப்படத்தை உயிர்ப்புள்ளதாக்க மேற்கொண்ட அளவு கடந்த உழைப்பை வெளிச்சப்படுத்துகிறது." என்று ராஷ்மிகா மந்தனா சந்தோஷமாக தன் உணர்வுகளை பகிர்ந்து உள்ளார் .
ஃபஹத் ஃபாசில் தயார் செய்த ...
தெலுங்கு திரைப்படத்தில் தன் அறிமுகம் குறித்து கூறுகையில் ஃபஹத் ஃபாசில் பகிர்ந்த விஷயங்கள் , "தெலுங்கு திரைப்படத்துறையில் புஷ்பா தி ரைஸ் பார்ட் 1 எனது அறிமுகத்தை மிகச்சிறப்பான ஒன்றாகச்செய்திருக்கிறது. என் பாத்திரம் படைக்கப்பட்ட விதத்திலிருந்து, அதன் தோற்றம், வசனங்கள், மற்றும் சண்டைக் காட்சி அனைத்தின் ஒவ்வொரு கூறுகளும் கதையோடு பின்னிப் பிணைக்கப்பட்டு, நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அம்மாதிரியான தனித்துவம் வாய்ந்த் கதாபாத்திரத்தை ஏற்க தயார்செய்து கொள்ளும் முயற்சிகளை நான் முழுமையாக ரசித்தேன். பிரைம் வீடியோ தனது சேவைகளில் இந்த திரைப்படத்தை வெளியிடுவதின் மூலம் என் நடிப்பின் ஒரு வித்தியாசமான பாணியை உலகெங்கிலுமுள்ள என் ரசிகர்கள் ரசித்து அனுபவிக்கும் விதமாக வழங்குவதில் நான் மிக மிக அதிக உற்சாமடைகிறேன் என்று கூறி முடித்தார் .