ஆஸ்கர் அழைத்த தமிழன்.. QUBE இணை நிறுவனர் செந்தில்குமார் ஸ்பெஷல் பேட்டி!
சென்னை: ஒட்டுமொத்த சினிமா துறையும் லாக்டவுன் காரணமாக முடங்கி இருக்கும் இந்த நேரத்திலும், சந்தோஷ செய்தியாக ஆஸ்கர் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தமிழ் நாட்டை சேர்ந்த QUBE இணை நிறுவனர் செந்தில்குமார்.
Recommended Video
சமீபத்தில், ஆஸ்கர் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது அதுகுறித்து, விளாவரியாக விளக்கி உள்ளார் இந்த ஸ்பெஷல் பேட்டியில்.
தியேட்டர்களில் திரையிடப்படும் படங்களுக்கு க்யூப் தான் தற்போது அங்கீகாரம் மற்றும் அனுமதி கொடுத்து நேரடியாக தியேட்டர்களில் படங்களை வெளியிட்டும் வருகிறது.

உலகளவில் செந்தில்குமாரின் முயற்சியை பலரும் அங்கீகரித்து உள்ள நிலையில், அகாடமியும் அவரை தற்போது அங்கிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட் போல நாம் ஏன் கோலிவுட், பாலிவுட் என காப்பி அடிக்க வேண்டும், தமிழ் சினிமா என சொல்வது தான் பெருமை என்ற கருத்தில் ஆழமாக இருக்கும் இவரது பேச்சுக்கள் பலருக்கும் நம்பிக்கை விதையை ஊட்டி வருகிறது.
தியேட்டர்கள் மூடியுள்ள நிலையில், க்யூப் நிறுவனத்துக்கும் பெரிதாக வேலை இல்லாமல் போயுள்ளது குறித்தும் பல தகவல்களை செந்தில்குமார் பேசுயுள்ள வீடியோவை காண லிங்கை க்ளிக் செய்யுங்க!


Click it and Unblock the Notifications











