எந்திரன் ஷூட்டிங்கில் ரஜினி செய்த "திருட்டுத்தனம்".. போட்டுடைத்த ராகவ்.. பார்ட் 2 பேட்டி!
சென்னை: டிக்கெட் படம் குறித்த பல விஷயங்களை தனது பேட்டியில் தெரிவித்திருந்த நடிகர் ராகவ், எந்திரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில ரகசியத்தையும் ஓப்பன் செய்துள்ளார்.
எந்திரன் படத்தில் மியூசிக்கை அதிகமாக வைத்து நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் எந்திரன் சிட்டியின் கோபத்திற்கு ஆளாகும் நபராக ராகவ் நடித்திருப்பார்.

அந்த சீனை தொடர்ந்து, ஐஸ்வர்யா ராயை ரயிலில் பலவந்தப்படுத்தும் காட்சியிலும் நடித்திருப்பார்.
கிட்டத்தட்ட 18 நாட்கள் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ள ராகவ், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கருக்கே தெரியாமல் செய்த ரகசிய விஷயம் ஒன்றை தனது பேட்டியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
எந்திரன் ஷூட்டிங்கின் போது, சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்ட நடிகர் ராகவ், தனது குடும்பத்தை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், சிட்டி லுக்கில் இருந்ததால், மேக்கப்பை நீக்கிய பிறகு போட்டோ எடுத்துக் கொள்ளலாம் எனக் கூற, தனது பெற்றோர் மற்றும் மனைவியை காக்க வைத்துள்ளார்.
ஆனால், ஷூட்டிங் முடிவடைய ரொம்ப நேரம் ஆகும் என்பதை உணர்ந்துகொண்ட ரஜினிகாந்த், ராகவை அழைத்து, இயக்குநர் ஷங்கருக்குத் தெரியாமல் திருட்டுத் தனமாக, இப்போதே போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால், வெளியே விட வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
ரஜினியின் வார்த்தையை மதித்த ராகவ், எந்திரன் படத்தின் ரிலீசுக்குப் பிறகே தனது சமூக வலைதளத்தில் அந்த புகைப்படத்தை ஷேர் செய்த நினைவுகளையும் இந்த இரண்டாவது பார்ட் பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











