Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சூப்பர் ஸ்டார்கள்:ராம் கோபால் வர்மா எரிச்சல்! சூப்பர் ஸ்டார் நடிகர்களை கையாளுவது பல நேரங்களில் எரிச்சலைக் கொடுக்கிறதுஎன பிரபல இயக்குனர் ராம் கோபால்வர்மா புலம்பியுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த ராம்போபால் வர்மா, இந்தியின் முன்னணி டைக்டர்.தாதாக்களின் பின்புலம் கொண்ட உண்மைக் கதைகளை திரைப்படங்களாக உருவாக்கிபரபரப்பை ஏற்படுத்தி வருபவர்.மணிரத்னத்துக்கு இணையாக இந்தித் திரையுலகில் முக்கிய இடம் பிடித்ததென்னிந்தியர் ராம்கோபால் தான். இப்போது ஷோலே படத்தை மீண்டும்இந்தியிலேயே மிக பிரமாண்டமாக ரீமேக் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.தாதாக்களின் மிரட்டால் எப்போதும் துப்பாக்கிய ஏந்திய பாதுகாவலர்களின்துணையோடு வலம் வரும் ராம்கோபால் வர்மா சூப்பர் ஸ்டார்கள் என்ற பெயரில்இந்தி உள்ளிட்ட சினிமாக்களை ஆண்டு வருபவர்களை ஒரு பிடி பிடித்துள்ளார்.கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசிய அவர்,சூப்பர் ஸ்டார் நடிகர்களை கையாளுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது. அவர்களைவைத்து படம் எடுக்கும்போது பல கட்டுப்பாடுகளை போட்டுக் கொள்ள வேண்டிஇருக்கிறது. இது நமது படைப்பை முழுமையாகக் கொண்டு வருவதற்கு பெரும்தடையாக உள்ளது.அதேசமயம், சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு நல்ல அனுபவம் இருப்பதால் அவர்களைவைத்து நல்ல படங்களையும் கொடுக்க முடிகிறது.என்னைப் பொறுத்தவரை புதுமுக நடிகர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து நமக்கேற்றபடி கதையை, படத்தைஉருவாக்குவது சுலபமானது.ஷாருக்கான் பெரிய சூப்பர் ஸ்டார். அவருக்கு ஏராளமான விசிறிகள் உள்ளனர்.குழந்தைகள் பலர் கூட ஷாருக்கின் விசிறிகளாக உள்ளனர். ஆனால் எனது ரசிகர்கள்வேறுபட்டவர்கள். நிஜத்தில் இருக்கிற விஷயங்களை விட எனது படத்தில் இருக்கும்விஷயங்கள் பெரிதானவை. வாழ்க்கையின் இருண்ட பகுதிகளை நான் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறேன். அந்த உலகுக்கு ஷாருக் கான் பொருத்தமானவராக இலலை.ஷோலே படம் மிகச் சிறந்த ஒரு படம். அதை ரீமேக் செய்வது, அதிலும் எனதுபாணியில் ரீமேக்செய்வது விததியாசமான அனுபவமாக இருக்கிறது. ஷோலேபடத்தில் எல்லா அம்சங்களும் இருக்கின்றன. அது ஒரு முழுமையான சினிமா.ஷோலேவுக்கு நிகராக எந்தப் படத்தையும் கூற முடியாது. 2006ம் ஆண்டில்காணப்படும்மும்பைதான் இந்தப் படத்தின் கதைக்களம். இப்படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகையர் குறித்து இன்னும் இறுதிமுடிவெடுக்கவில்லை.நான் தற்போது எடுத்து வரும் நிஷாபாத் படத்தில் அமிதாப்பச்சன், ஜியா கான்ஆகியோர் உள்ளனர் என்றார் வர்மா.15 ஆண்டுகளுக்கு முன் வர்மா இயக்கத்தில் வெளியான தெலுங்குப் படமான சிவா,தெலுங்குப் படங்களின் முகத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது. நாகார்ஜூனா,அமலா ஆகியோரன் நடிப்பில் உருவான அந்தப் படம், மிகப் பெரிய வெற்றியைப்பெற்றது.அந்தப் படத்தை சிவா-2006 என்ற பெயரில் மீண்டும் எடுக்க்வுள்ளாராம் வர்மா.இதுகுறித்து வர்மா கூறுகையில், அன்றையசிவா ஒருகோபக்கார இளைஞன்.கல்வித்துறையில் பெருக்கெடுத்து ஓடிய ஊழலையும், ஊழல்வாதிகளையும்,குற்றவாளிகளையும் கண்டு பொங்கியவன்.எனது இன்றைய சிவா,காவல்துறையில் மலிந்து கிடக்கும் ஊழலை எதிர்த்துபோராடுகிறான். இதில் மோகித் அஹல்வாத், நிஷா கோத்தாரி (நம்ம அமோகா தான்)ஆகியோர் நடிக்கிறார்கள் என்கிறார் வர்மா.
சூப்பர் ஸ்டார் நடிகர்களை கையாளுவது பல நேரங்களில் எரிச்சலைக் கொடுக்கிறதுஎன பிரபல இயக்குனர் ராம் கோபால்வர்மா புலம்பியுள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த ராம்போபால் வர்மா, இந்தியின் முன்னணி டைக்டர்.தாதாக்களின் பின்புலம் கொண்ட உண்மைக் கதைகளை திரைப்படங்களாக உருவாக்கிபரபரப்பை ஏற்படுத்தி வருபவர்.மணிரத்னத்துக்கு இணையாக இந்தித் திரையுலகில் முக்கிய இடம் பிடித்ததென்னிந்தியர் ராம்கோபால் தான். இப்போது ஷோலே படத்தை மீண்டும்இந்தியிலேயே மிக பிரமாண்டமாக ரீமேக் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.தாதாக்களின் மிரட்டால் எப்போதும் துப்பாக்கிய ஏந்திய பாதுகாவலர்களின்துணையோடு வலம் வரும் ராம்கோபால் வர்மா சூப்பர் ஸ்டார்கள் என்ற பெயரில்இந்தி உள்ளிட்ட சினிமாக்களை ஆண்டு வருபவர்களை ஒரு பிடி பிடித்துள்ளார்.கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசிய அவர்,சூப்பர் ஸ்டார் நடிகர்களை கையாளுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது. அவர்களைவைத்து படம் எடுக்கும்போது பல கட்டுப்பாடுகளை போட்டுக் கொள்ள வேண்டிஇருக்கிறது. இது நமது படைப்பை முழுமையாகக் கொண்டு வருவதற்கு பெரும்தடையாக உள்ளது.என்னைப் பொறுத்தவரை புதுமுக நடிகர்களை தேர்வு செய்து,
அவர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து நமக்கேற்றபடி கதையை, படத்தைஉருவாக்குவது சுலபமானது.
ஷாருக்கான் பெரிய சூப்பர் ஸ்டார். அவருக்கு ஏராளமான விசிறிகள் உள்ளனர்.குழந்தைகள் பலர் கூட ஷாருக்கின் விசிறிகளாக உள்ளனர். ஆனால் எனது ரசிகர்கள்வேறுபட்டவர்கள். நிஜத்தில் இருக்கிற விஷயங்களை விட எனது படத்தில் இருக்கும்விஷயங்கள் பெரிதானவை. வாழ்க்கையின் இருண்ட பகுதிகளை நான் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறேன். அந்த உலகுக்கு ஷாருக் கான் பொருத்தமானவராக இலலை.
ஷோலே படம் மிகச் சிறந்த ஒரு படம். அதை ரீமேக் செய்வது, அதிலும் எனதுபாணியில் ரீமேக்செய்வது விததியாசமான அனுபவமாக இருக்கிறது. ஷோலேபடத்தில் எல்லா அம்சங்களும் இருக்கின்றன. அது ஒரு முழுமையான சினிமா.
ஷோலேவுக்கு நிகராக எந்தப் படத்தையும் கூற முடியாது. 2006ம் ஆண்டில்காணப்படும்மும்பைதான் இந்தப் படத்தின் கதைக்களம். இப்படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகையர் குறித்து இன்னும் இறுதிமுடிவெடுக்கவில்லை.
நான் தற்போது எடுத்து வரும் நிஷாபாத் படத்தில் அமிதாப்பச்சன், ஜியா கான்ஆகியோர் உள்ளனர் என்றார் வர்மா.
15 ஆண்டுகளுக்கு முன் வர்மா இயக்கத்தில் வெளியான தெலுங்குப் படமான சிவா,தெலுங்குப் படங்களின் முகத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது. நாகார்ஜூனா,அமலா ஆகியோரன் நடிப்பில் உருவான அந்தப் படம், மிகப் பெரிய வெற்றியைப்
பெற்றது.அந்தப் படத்தை சிவா-2006 என்ற பெயரில் மீண்டும் எடுக்க்வுள்ளாராம் வர்மா.
இதுகுறித்து வர்மா கூறுகையில், அன்றையசிவா ஒருகோபக்கார இளைஞன்.கல்வித்துறையில் பெருக்கெடுத்து ஓடிய ஊழலையும், ஊழல்வாதிகளையும்,குற்றவாளிகளையும் கண்டு பொங்கியவன்.
எனது இன்றைய சிவா,காவல்துறையில் மலிந்து கிடக்கும் ஊழலை எதிர்த்துபோராடுகிறான். இதில் மோகித் அஹல்வாத், நிஷா கோத்தாரி (நம்ம அமோகா தான்)ஆகியோர் நடிக்கிறார்கள் என்கிறார் வர்மா.