Don't Miss!
- News அமேதி தொகுதியில் ராகுல் காந்தி "மைத்துனர்" ராபர்ட் வதேரா போட்டியா? காங்கிரஸ் போஸ்டர்களால் பரபரப்பு!
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நித்யானந்தருக்கு நான் செய்தது சேவை!- ரஞ்சிதா திடீர் பேட்டி
நித்யானந்த சாமியாருடன் ரஞ்சிதா படுக்கையில் உருண்டு புரண்ட காட்சிகள் தொலைக்காட்சியில் வெளியாகி, போலிச் சாமியாரின் முகத்திரையை விலக்கிக் காட்டியது.
இந்த வீடியோ வெளியான கையோடு சாமியாரும் ரஞ்சிதாவும் தலைமறைவாகிவிட்டனர்.
கும்பமேளாவில் சாமியார் இருப்பதாக அவரது ஆசிரமத்தினர் கூறியுள்ளனர். வீடியோவில் சாமியாருடன் இருப்பவர் ரஞ்சிதாதான் என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ரஞ்சிதா எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது. இப்போது அவர் கேரளாவில் ரகசிய இடமொன்றில் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் செல்போன் மூலம் குமுதம் ரிப்போர்டர் இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே?
ஆமாம். நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அது ஊருக்கே தெரியும். அவரது கொள்கைகள், ஆன்மீக உரைகளால் கவரப்பட்டவள் நான். எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வீஸிங் தொல்லையை ஒரே நாளில் குணப்படுத்தியவர் அவர்... அன்று முதல் அவரது பக்தை ஆகிவிட்டேன்...
அந்த ஆபாச காட்சிகள்...
காலைப் பிடித்து விடுவதும் மாத்திரை கொடுப்பதும் உணவு தருவதும் ஒரு பணிவிடைதானே.. அத்துடன் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
சாமியாரை மிரட்டி பணம் பறிக்கத்தான் இப்படிச் செய்தீர்களாமே?
நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பணத்துக்காக நானே இப்படியெல்லாம் படமெடுத்தேன் என்று மீடியா சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. எந்த ஒரு பெண்ணாவது தன்னைத்தானே இப்படி எடுத்துக் கொள்வாளா?
உங்கள் கணவர் ராகேஷை ஏன் விவாகரத்து செய்தீர்கள்?
பத்திரிகை- டிவிக்களில்தான் இப்படி சொல்கிறார்கள். ஏன் இப்படி? எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.
நடந்த உண்மையை வெளிச்சத்துக்கு வந்து நீங்களே சொல்லலாமே?
அதான் இப்போது சொல்லிட்டேனே... நித்யானந்தா மகாஞானி. அடுத்த இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்தாதீர்கள்..."
-இவ்வாறு கூறியுள்ளார் ரஞ்சிதா.