Don't Miss!
- News அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு! மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சீவலப்பேரி பாண்டியன் 2ம் பாகத்தில் நடிக்க ரெடி.. நடிகர் நெப்போலியன் சுவாரஸ்ய பேட்டி!
சென்னை: டெவில்ஸ் நைட் உள்ளிட்ட மூன்று ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகர் நெப்போலியன் தற்போது பிலிமி பீட்டுக்கு கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
வேட்டி சட்டையுடன் கையில் அருவா பிடித்தபடி அய்யனார் போல சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த நடிகர் நெப்போலியன், இந்த வயதிலும், ஆர்வம் குறையாமல், அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது.
எந்த நேரத்திலும் தன்னம்பிக்கையை கைவிடக் கூடாது, முயற்சி செய்து கொண்டே இருக்கணும் என அவர் அடுக்கடுக்காக பாசிட்டிவ் கருத்துக்களாக பேசும் இந்த வி கனெக்ட் பேட்டி, ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் நம்பிக்கையை ஊட்டி பாசிட்டிவிட்டியை வளர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
லாக்டவுன சமாளிக்க முடியல.. முதல்ல நிறைய பேர் கொடுத்தாங்க.. இப்போ யாருமே கண்டுகல.. வையாபுரி வருத்தம்
டெவில்ஸ் நைட்,: டான் ஆஃப் தி நைட் ரோக், எனும் த்ரில்லர் படத்தில் நடிகர் நெப்போலியன் நடித்துள்ளார். சாம் லோகன் கலோகி எனும் ஹாலிவுட் இயக்குநர் இயக்கி உள்ள இந்த் த்ரில்லர் படம் அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது.
விரைவில் இந்திய ரசிகர்கள் பார்வைக்கும் வரவுள்ளதாக இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தியேட்டரில் வெளியிடலாம் என காத்திருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக OTT தளத்தில் வெளியிடும் சூழல் உருவாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.
ரகுவரன், சத்யராஜ், நெப்போலியன் மூன்று பேரில் யார் உயரம் என்ற கேள்விக்கு, ரகுவரன் சரி சமமாக இருப்பார் என நினைக்கிறேன். சத்யராஜ் 6.2 உயரம் நான், 6.3 ஆனால், உயரத்தை விட எல்லா வற்றிலும் என்னை விட அவர் உயர்ந்தவர் என கலகலப்பாக பேசினார்.
பின்னர், சீவலப்பேரி பாண்டி பட நினைவுகளை பகிர்ந்து கொண்ட அவர், அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால், இப்போதும் தான் நடிக்கத் தயார் என கூறியுள்ள இந்த முழு பேட்டியை காண வீடியோ லிங்கை க்ளிக் செய்யுங்க!