Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
2வது திருமணம் செய்வதில் என் மகனுக்கு கோபம் தான், எதற்கு என்றால்..: நடிகை விளக்கம்
Recommended Video
ஹைதராபாத்: தான் 2வது திருமணம் செய்வதில் மகனுக்கு கோபம் என்று எழுந்த பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகை ரேணு தேசாய்.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய்க்கும், புனேவை சேர்ந்த தொழில் அதிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
ரேணு தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
கோபம்
ரேணு தேசாய் இரண்டாவது திருமணம் செய்வது அவரின் மகன் அகிராவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ரேணு விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு முறையே
இந்த திருமணம் பெரியவர்கள் பார்த்து நடத்துவது. காதல் ஒரு முறை தான் வரும். மீண்டும் மீண்டும் வராது. நான் கடந்த 7 ஆண்டுகளாக சிங்கிளாக இருந்தேன். தற்போது மகிழ்ச்சியாக உள்ளது. என் வருங்கால கணவர் மிகவும் நல்லவர் என்கிறார் ரேணு.
மகிழ்ச்சி
நான் மீண்டும் திருமணம் செய்து கொள்வதில் என் மகனுக்கு மகிழ்ச்சியே தவிர கோபம் கிடையாது. அவனுக்கு கோபம் தான் மெனுவில் பன்னீர் பட்டர் மசாாலா இல்லை என்ற கோபம் என்று ரேணு தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை
விவாகரத்து ஆன பிறகும் எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை உள்ளது. இந்திய முறைப்படி திருமணம் செய்து வாழவே விரும்புகிறேன். லிவ் இன் முறைப்படி வாழ்வதில் விருப்பம் இல்லை என்று ரேணு கூறியுள்ளார்.
முடியாது
முன்பு ஒரு முறை வேறு வழி இல்லாமல் லிவ் இன் முறைப்படி வாழ வேண்டியதாகிவிட்டது. ஆனால் அதை மீண்டும் செய்ய மாட்டேன். எனக்கு 37 வயதாகிறது. நான் பாரம்பரிய முறைப்படி வாழ விரும்புகிறேன் என்கிறார் ரேணு.