twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இணைக்கும் சமிக்ஷா! முருகா படத்தில் ஹீரோவையும், ஹீரோயினையும் இணைத்து வைக்கும் சூப்பர்கேரக்டரில் நடித்து வருகிறார் சமிக்ஷா. சண்டிகர் தந்த தங்கக் கட்டி சமிக்ஷா. அந்த பூமியிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த3வது ராணி. முதல்ராணி முன்னாள் நடிகை ரதி, சமீபத்தில் வந்த சோனியா அகர்வால்இரண்டாவது ராணி. இப்போது சமிக்ஷா. இதில் மேட்டர் என்னவென்றால், சோனியாஅகர்வாலை, சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சமிக்ஷாவுக்கு ரொம்ப நன்னாத்தெரியுமாம்.அறிந்தும் அறியாமலும் முதல் படம். இரண்டாவது படம் மெர்க்குரிப் பூக்கள். அடுத்துஷாமுடன் மனதோடு மழைக்காலம். இப்போது முருகா படத்தில் 2வது நாயகியாகஅசத்தி வருகிறார் சமிக்ஷா. படு ரிலாக் ஸ்டாக நடித்து வரும் சமிக்ஷாவைப் பிடித்துகுண்டக்க மண்டக்க கேள்வி கேட்டோம்.சற்றும் சளைக்காமல் பதிலைத் தூக்கிப் போட்டார் சமிக்ஷா. பத்தாவது படித்துக்கொண்டிருந்த போதே எனது நடிப்புத்திறமையை நான்உணர்ந்து விட்டேன். இப்போது3 தமிழ்ப் படங்களில் நடித்து விட்டேன். 4வது படமாக முருகா செய்துகொண்டிருக்கிறேன்.முருகாபடத்தில் எனக்கு அருமையான கேரக்டர். அதாவது ஹீரோவையும்,ஹீரோயினையும் சேர்த்து வைக்கும் கதாபாத்திரம். நன்கு நடிக்கும் வாய்ப்புள்ளகேரக்டர். அழகாக செய்து வருகிறேன்.இப்படத்திலும் எனது கிளாமர் நடிப்பு தொடருகிறது. நடிப்போடு, கிளாமரையும்சரிவிகித சமானத்தி கலந்து கொடுத்து நடிக்கிறேன். ஆபாசமாக இல்லாமல் ரசிக்கும்படியாக எனது கவர்ச்சி இருக்கும்.எனக்கு இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் குறித்து பயமே இல்லை. உண்மையில் இப்படிநடித்தால் தான் நமது திறமையை வெளிக் கொண்டு வர முடியும். நமக்குமுக்கியத்தவம் இருந்தால் நடித்து விட்டுப் போக வேண்டியது தானே!

    By Staff
    |

    முருகா படத்தில் ஹீரோவையும், ஹீரோயினையும் இணைத்து வைக்கும் சூப்பர்கேரக்டரில் நடித்து வருகிறார் சமிக்ஷா.

    சண்டிகர் தந்த தங்கக் கட்டி சமிக்ஷா. அந்த பூமியிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த3வது ராணி. முதல்ராணி முன்னாள் நடிகை ரதி, சமீபத்தில் வந்த சோனியா அகர்வால்இரண்டாவது ராணி. இப்போது சமிக்ஷா. இதில் மேட்டர் என்னவென்றால், சோனியாஅகர்வாலை, சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சமிக்ஷாவுக்கு ரொம்ப நன்னாத்தெரியுமாம்.

    அறிந்தும் அறியாமலும் முதல் படம். இரண்டாவது படம் மெர்க்குரிப் பூக்கள். அடுத்துஷாமுடன் மனதோடு மழைக்காலம். இப்போது முருகா படத்தில் 2வது நாயகியாகஅசத்தி வருகிறார் சமிக்ஷா. படு ரிலாக் ஸ்டாக நடித்து வரும் சமிக்ஷாவைப் பிடித்துகுண்டக்க மண்டக்க கேள்வி கேட்டோம்.

    சற்றும் சளைக்காமல் பதிலைத் தூக்கிப் போட்டார் சமிக்ஷா. பத்தாவது படித்துக்கொண்டிருந்த போதே எனது நடிப்புத்திறமையை நான்உணர்ந்து விட்டேன். இப்போது3 தமிழ்ப் படங்களில் நடித்து விட்டேன். 4வது படமாக முருகா செய்துகொண்டிருக்கிறேன்.

    முருகாபடத்தில் எனக்கு அருமையான கேரக்டர். அதாவது ஹீரோவையும்,ஹீரோயினையும் சேர்த்து வைக்கும் கதாபாத்திரம். நன்கு நடிக்கும் வாய்ப்புள்ளகேரக்டர். அழகாக செய்து வருகிறேன்.

    இப்படத்திலும் எனது கிளாமர் நடிப்பு தொடருகிறது. நடிப்போடு, கிளாமரையும்சரிவிகித சமானத்தி கலந்து கொடுத்து நடிக்கிறேன். ஆபாசமாக இல்லாமல் ரசிக்கும்படியாக எனது கவர்ச்சி இருக்கும்.

    எனக்கு இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் குறித்து பயமே இல்லை. உண்மையில் இப்படிநடித்தால் தான் நமது திறமையை வெளிக் கொண்டு வர முடியும். நமக்குமுக்கியத்தவம் இருந்தால் நடித்து விட்டுப் போக வேண்டியது தானே!எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் உண்டு.

    அதில் தப்பில்லையே! இப்போதைய இளைஞர்களின் கலாச்சாரமே வேறு. அதில்யாரும் தவறு கண்டுபிடிக்க முயலக் கூடாது. இப்படித்தான் அவர்கள் இருப்பார்கள்.யாருடன் வேண்டுமானாலும் பழகலாம், ஆனால் எல்லையை தாண்டாமல் இருந்தால்நல்லது.

    நான் பாய்பிரண்ட்ஸோடு டேட்டிங் போவேன். இதை தைரியமாகவே சொல்கிறேன்.அதற்காக எல்லை மீறுவேன் என்று தப்புக் கணக்கு போட்டு விடவேண்டாம்.நான் கிளாமராக தொடர்ந்து நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. இது தான் சரியானபாதை. இப்போதெல்லாம் முதலில் கிளாமர், பிறகு ஹோம்லி, அப்புறம்வித்தியாசமான கதாபாத்திரங்கள் என்று கலக்கலாம்.

    எனக்கு முன்பிருந்த பல முன்னணி ஹீரோயின்கள் கூட இப்படித்தான்ஜெயித்திருக்கிறார்கள் என்று மூச்சு விடாமல் கூறி நிறுத்தினார் சமிக்ஷா.சமிக்ஷா சாதாரண பொண்ணு இல்லை. பி.இ. படிச்ச என்ஜீனியரும் கூட. ஸோ,நடிக்கும் வாய்ப்பு குறைந்தால் எங்காவது சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்குசேர்ந்து பிழைத்துக் கொள்ளலாம்!

    முருகா பட யூனிட்டோடு ரொம்ப ஒன்றிப் போய் விட்டாராம் சமிக்ஷா. காரணம்யூனிட்டில் இருக்கும் எல்லோருக்குமே அதிகபட்சம் 35 வயதுக்குள்தானாம்.இளைஞர்களாக இருப்பதால் சமிக்ஷா படு ஜாலியாக நடித்து வருகிறாராம். சரி,ஆர்யாவோடு என்ன பிரச்சினை, இப்பெல்லாம் பார்ட்டிக்கு போறதில்லையாமேஎன்று சமிக்ஷாவிடம் வம்பு வளர்த்தோம்.

    அதெல்லாம கிடையாது. நான் அவரை லவ் செய்வதாக கூறினார்கள். அது சுத்தமானகிசுகிசு. நாங்கள் நல்ல நணப்ர்கள் அவ்வளவுதான். எங்களுககுள் வேறு எதுவுமேஇல்லை, எப்பவுமே இல்லை. ஜஸ்ட் பிரண்ட்ஸ், தட்ஸ் ஆல் என்றார் தெளிவாக.சமிக்ஷாவை இம்சை அரசி என்றும் கூறலாம், பேசிக் கொண்டிருந்த அத்தனை நேரம்நமது இதயத்தை அப்படி இம்சித்து விட்டார்!

      Read more about: samikshas muruga
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X