Don't Miss!
- News சம்மர்லயும் சளி பிடிக்கிற அளவுக்கு நான் ரொம்ப ரேர் பீஸ் செட்டியார்!
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'மலேஷிய போலீஸ் என் கையைப் பிடித்து இழுத்து தள்ளியது!' - சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம் படத்தில் நாயகியாக நடித்தவர் சமீரா ரெட்டி. அஜீத்துக்கு ஜோடியாக இப்போது அசல் படத்தில் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு மலேஷியாவில் சமீபத்தில் நடந்தது. அப்போது கோலாலம்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தாராம் சமீரா. அப்போது சில போலீசார் அவரை கையை பிடித்து இழுத்து தாக்கியதுடன் கீழே தள்ளி விட்டதாகவும் செய்தி வெளியானது.
படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய சமீரா ரெட்டியிடம் இந்த சம்பவம் பற்றி கேட்டதற்கு, உண்மைதான்... மறக்க முடியாத மோசமான நிகழ்ச்சி அது. 'அசல்' படப்பிடிப்புக்காக சென்ற நான் கோலாலம்பூரில் நட்சத்திர ஹோட்டலொன்றில் தங்கினேன்.
அப்போது லிப்டில் ஏறிய என்னை சிலர் தாக்கினர். கையை பிடித்து இழுத்து கீழே தள்ளி விட்டனர். பொதுவாக நான் அமைதியான பெண். என்னை அவமானப்படுத்தினால்கூட பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆனால் கோலாலம்பூர் ஹோட்டலில் நடந்த சம்பவம் என்னை வேதனைப்பட வைத்தது. அது ஒரு கெட்ட கனவு.
யாரோ ஒரு முக்கிய பிரமுகரின் பாதுகாப்புக்காக வந்த காவலர்கள் அவர்கள் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். நான் யாரென்பது தெரியமால் நடந்த நிகழ்ச்சி அது என்பதால் அத்துடன் விட்டுவிட்டேன் என்றார்.