Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய்யாக இருந்தாலும் ஏற்க முடியாது: கவுதமி கோபம்
சென்னை: உச்சம் தொட்ட நடிகராக இருந்தாலும் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை ஏற்கவே முடியாது என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் பட போஸ்டரில் அவர் தம்மடிப்பது போன்று போஸ் கொடுத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.
விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து நடிகை கவுதமி கூறியதாவது,
உச்சம் தொட்ட நடிகராக இருந்தாலும் சரி புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. சிகரெட் பிடிப்பவருக்கு மட்டும் அல்ல அவர் அருகில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
நான் புகைப்பிடிப்பதால் எனக்கு தானே கேடு என்று சொல்ல முடியாது. அவர் விடும் புகையை சுவாசிக்கும் நபர்களுக்கும் கேடு. இது கொடூரமான விஷயம் என்றார்.
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த கவுதமி தன்னை போன்றே அந்த நோயை எதிர்த்து போராடி வெற்றி பெறுபவர்களை கவுரவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.