Don't Miss!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விஜய்யாக இருந்தாலும் ஏற்க முடியாது: கவுதமி கோபம்
சென்னை: உச்சம் தொட்ட நடிகராக இருந்தாலும் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை ஏற்கவே முடியாது என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் பட போஸ்டரில் அவர் தம்மடிப்பது போன்று போஸ் கொடுத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.
விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து நடிகை கவுதமி கூறியதாவது,
உச்சம் தொட்ட நடிகராக இருந்தாலும் சரி புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. சிகரெட் பிடிப்பவருக்கு மட்டும் அல்ல அவர் அருகில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
நான் புகைப்பிடிப்பதால் எனக்கு தானே கேடு என்று சொல்ல முடியாது. அவர் விடும் புகையை சுவாசிக்கும் நபர்களுக்கும் கேடு. இது கொடூரமான விஷயம் என்றார்.
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த கவுதமி தன்னை போன்றே அந்த நோயை எதிர்த்து போராடி வெற்றி பெறுபவர்களை கவுரவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.