சுந்தரபாண்டியனில் ரஜினி ரசிகராக நடிக்கும் சசிகுமார்!
தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என அனைத்திலும் வெற்றியை ருசித்தவர் எம் சசிகுமார்.
போராளி படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் சுந்தரபாண்டியன். இதில் அவர் ஹீரோ மட்டுமில்லை, தயாரிப்பாளரும் கூட. இந்தப்படத்தை அவரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எஸ்ஆர் பிரபாகரன் இயக்குகிறார்.
படத்தின் செய்தியாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. அதற்கு முன் படத்தின் பாடல்களை திரையிட்டுக் காட்டினர். ஒரு பாடலில் ரஜினியின் ரசிகராக அவரைக் காட்டியிருந்தனர். அதில் ரஜினி ஸ்டைலில் டான்ஸ் போட்டிருப்பார் சசிகுமார்.
பின்னர் கேள்வி பதில் நேரத்தில், " இந்தப் படத்தில் ரஜினி ரசிகராக நடித்திருக்கிறீர்களா?" என்று கேள்வியை வீசினர்.
அதற்கு பதிலளித்த சசிகுமார், "ஆமாம்... நான் ரஜினியின் ரசிகராக இந்தப் படத்தில் வருகிறேன். பாடல் காட்சியிலும் அது தெரியும். இது இயக்குநர் முடிவு செய்து டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் கொடுத்து நடித்தது. வேண்டுமென்று திணிக்கப்பட்டதில்லை. நிஜத்திலும் நான் ரஜினி மற்றும் கமலின் ரசிகன்தான்!," என்றார்.
தாடியை விடமாட்டேன்னு பிடிவாதம் பிடிப்பது ஏன்?
தாடி எடுத்து நடிக்கனும்னு எனக்கும் ஆசைதான். . ஆனா அது நான் இயக்கி நடிக்கும் படத்தில் நிறைவேறும். சுப்பிரமணியபுரம் படத்துல தாடியோட நடிச்சேன். நாடோடிகள், போராளி, மாஸ்டர்ஸ், இப்போ சுந்தர பாண்டியன் வரைக்கும் என் கேரக்டர் தாடியோட இருக்கலாம்னு முடிவு பண்ணோம். ஆனா அடுத்து நான் இயக்கி நடிக்கும் படத்தில் தாடி இருக்காது!!


Click it and Unblock the Notifications












