நாய் சேகர் படத்தை பார்க்க மொழி தேவையில்லை... சதீஷ் பேட்டி
சென்னை : நடிகர் சதீஷ், பவித்ரா லக்ஷ்மி லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் நாய் சேகர்.
Recommended Video

இந்தப் படம் இன்றைய தினம் திரையங்குகளில் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் பிலிமிபீட் நேயர்களுக்காக அளித்துள்ள பேட்டியில் படம் குறித்த பல்வேறு விஷயங்களை சதீஷ் பகிர்ந்து கொண்டார்.
நாய் சேகர் படம்
நடிகர் சதீஷ், பவித்ரா லக்ஷ்மி லீட் கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் நாய் சேகர். இந்தப் படத்தில் மனிதன் நாயாகவும் நாய் மனிதனாகவும் மாறினால் என்னவாகும் என்பதை மையமாக வைத்து கதைக்களத்தை இயக்குநர் கிஷோர் உருவாக்கியுள்ளார்.

முக்கியமான கதாபாத்திரத்தில் நாய்
இந்தப் படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. நாய்க்கு பின்னணி கொடுத்துள்ளார் பிரபல நடிகர் மிர்ச்சி சிவா. படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்றைய தினம் படம் வெளியாகியுள்ளது.

நாயகனாக என்ட்ரி
நடிகர் சதீஷ் முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி நடிகராக பணியாற்றியுள்ள நிலையில், முதல் முறையாக இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாகியுள்ளார். படத்தில் நாய்க்கும் அவருக்குமான காம்பினேஷன் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன.

சதீஷ், பவித்ரா பேட்டி
படம் குறித்து தற்போது சிறப்பான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், படம் குறித்து பிலிமிபீட் நேயர்களுடன் சதீஷும் பவித்ரா லஷ்மியும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்தப் படத்தை பார்ப்பதற்கு மொழி தேவையில்லை என்று சதீஷ் தெரிவித்துள்ளார்.

படத்தை பார்க்க மொழி தேவையில்லை
காட்சிகளின் மூலமே படத்தை உணர்ந்து ரசிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல படத்தில் உதவி இயக்குநர்கள் தங்களது படம் போல நினைத்து படத்திற்காக சிறப்பாக உழைத்ததாகவும் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான பெயர், புகழ்
இதனிடையே பேசிய நடிகை பவித்ரா லக்ஷ்மி, ஒரு நடிகைக்கு 3 படங்களை தாண்டி கிடைக்க வேண்டிய பெயரையும் புகழையும் ரசிகர்கள் தனக்கு முன்னதாகவே தந்துள்ளதாகவும் அதை தொடர்ந்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











