Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சந்திப்போமா?
ஓய்வு கிடைத்தால் ஷாலினி ஏ.கே இன்டர் நேஷனல் ( அஜீத் குமார் இன்டர்நேஷனல்) ஆபிசுக்கு வந்து விடுகிறார். திருமதி ஷாலினி அஜீத்குமாரை,ஏ.கே. இன்டர் நேஷனல் அலுவலகத்தில் சந்தித்தோம்.
திருமணத்திற்குப்பிறகு நடிப்பதில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லியிருந்தேன். அதற்கு முன்பே பிரியாத வரம் வேண்டும் படப்பிடிப்பை முடித்து விடுங்கள்என்று நேரம் கொடுத்து காத்திருந்தேன். பல முறை திருமணத்திற்கு பிறகு நடிக்கமுடியாது என்று சொல்லியும் கேட்கவில்லை.
இரண்டு நாட்கள் வேலை பாக்கி என்றார்கள். திருமணத்திற்குப்பிறகு நடிக்க வேண்டும் என்றார்கள். தர்மசங்கடமாகி விட்டது. சினிமா உலகம் இன்றுடெக்னிக்கலாக எவ்வளவோ முன்னேறி விட்டது. யாருக்குமே தெரியாத ஒரு விஷயத்தை இப்பொழுது சொல்கிறேன்.
அலைபாயுதே படத்தில் ரோட்டை கிராஸ் செய்யும் பொழுது குஷ்பூ ஓட்டி வந்த காரில் நான் சிக்கி தூக்கி எரியப்படுகின்ற காட்சியில் ஒரு ப்ரேமில் கூட நான்நடிக்கவில்லை. நான் ரோட்டை கடக்க முயற்சிப்பதும், தூக்கி எறியப்படுவதுமாக காட்டியிருப்பார்கள். இந்தக் காட்சியில் நடிக்காமல், நடித்தேன்.
அதே மாதிரி பிரியாத வரம் வேண்டும் படத்திலும் டெக்னிக்காவே நான் நடித்து முடித்துவிட்டேன். விஞ்ஞான வளர்ச்சி உபயோகத்தால் படம்தீபாவளிக்கு வெளிவரப்போகிறது.
சினிமா தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை நாங்கள் நன்கு அறிவோம். நம்மால் ஒரு படம் நின்று விடுமோ என்று மனதுக்கு கஷ்டமாகவே இருந்தது. நல்லவேளை இப்பொழுது ரீலீஸாகப்போகிறது சந்தோஷமாகவும் இருக்கிறது என்றார் திருமதி ஷாலினி அஜீத்குமார்.