Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க கீபோர்டில் A and D இடையே உள்ள எழுத்தை மோடி பார்க்கனும்: மா.கம்யூ போராட்டம்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அப்போ ரகு.. இப்போ இவர் தான்.. சின்சானுக்கு குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞரின் படு ஜாலி பேட்டி!
சென்னை: குழந்தைகளின் ஃபேவரைட் ஆன கார்ட்டூன் தொடர் சின்சானுக்கு தற்போது தமிழில் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் டீகன் ராஜாவின் பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.
மோட்டு பட்லு, நிஞ்சா அட்டோரி, சின்சான் என ஏகப்பட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு தனது குரலை மாற்றி மாற்றி மெமிக்ரி செய்து அசத்தி வருகிறார் டீகன்.
இந்த லாக்டவுன் நேரத்தில் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க அனுமதி கிடைத்ததும் மீண்டும் சின்ன சின்ன டப்பிங் வேலைகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
1500 கோடிக்கும் மேல் எடுக்கும் அவதார் படத்தின் ஹீரோவுக்கு தமிழில் பேசும் டப்பிங் கலைஞருக்கு ஏன் இவ்வளவு கம்மியாக சம்பளம் கொடுக்கிறார்கள் உள்ளிட்ட பல காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ள டீகன்.
நிஞ்சா அட்டோரியின் லீடு கதாபாத்திரமும் சின்சானும் ஹோட்டல் ஒன்றில் சந்தித்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதை செம நகைச்சுவையாக பேசி காட்டி உள்ளார்.
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. கேரளாவில் வேலையை தொடங்கிய விஜய் ரசிகர்கள்!
மேலும், கடந்த 2013ம் ஆண்டு வரை சின்சான் கதாபாத்திரத்திற்கு ரகு எனும் டப்பிங் கலைஞர் குரல் கொடுத்து வந்த நிலையில், 2013ம் ஆண்டுக்கு பிறகு அதே சின்சான் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து வருபவர் இவர் தான். ஆனால், இரு குரலுக்கும் எந்தவொரு வித்தியாசமும் தெரியாத அளவுக்கு மெமிக்ரி செய்து வருவது இவரது தனிப்பட்ட திறமை.
பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் போது, சினிமா பிரபலங்களான லூசு மோகன், உசிலமணி குரல்களை பேசி அசத்தி வந்த இவர், தற்போது அதையே தனது வாழ்வாதாரமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். நடிப்பிலும் தனக்கு ஆர்வம் இருப்பதாகவும், தான் நடித்த படம் குறித்த பிரத்யேக தகவலை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை க்ளிக் செய்து பாருங்க!