Don't Miss!
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எனது காரை நானே உடைக்கும் அளவுக்கு அசிங்கமானவன் இல்லை-சாமி
சாமி இயக்கும் படங்கள்தான் சர்ச்சையாகும். அந்த வரிசையில் சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான, கள்ளக்காதலை மையமாகக் கொண்ட கதையுடன் கூடிய சிந்துசமவெளி படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆனால் தற்போது சாமியே சர்ச்சையில் மாட்டியுள்ளார்.
மாமனார், மருமகள் கள்ளக்காதலை பற்றிப் படம் எடுத்ததால், தன்னை பலர் மிரட்டுவதாகவும், காரைத் தாக்கி விட்டதாகவும், தனக்கும், பட நாயகி அனகாவுக்கும் கொலை மிரட்டல்கள் வருவதாகவும் போலீஸில் புகார் கொடுத்தார் சாமி.
ஆனால் சாமியே காரைத் தாக்கி உடைத்து விட்டு பொய்யான புகாரைக் கொடுத்திருக்கலாம், அதேபோல கொலை மிரட்டலும் கூட பொய்யானதாக இருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதுதொடர்பாக அனகாவையும், சாமியையும் அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து சாமி கூறுகையில்,
என் வீட்டில் நிறுத்தி இருந்த எனது கார் மீது விஷமிகள் கல்வீசியது உண்மை. நானே காரை உடைத்து விட்டு போலீசில் புகார் அளித்தேன் என்று வதந்தி பரப்புகின்றனர். இது எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. அப்படியெல்லாம் அசிங்கமான காரியத்தில் ஈடுபட மாட்டேன். எனது நேர்மையும் தைரியமும் எல்லோருக்கும் தெரியும்.
இது மாதிரி மலிவான விளம்பரம் தேடும் ஆள் நான் இல்லை. மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்வது எனது பழக்கம். நானே எனது காரை உடைத்தேன் என்பதெல்லாம் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள். எனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததும் உண்மை. போலீசில் புகார் அளித்த பிறகு மிரட்டல் எதுவும் வரவில்லை என்றார்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!