நித்யானந்தா செஞ்சதுல தப்பே இல்லையாம்... சொல்கிறார் வடிவேலுவிடம் ஆட்டய போட்ட சிங்கமுத்து!

-இப்படி திருவாய் மலர்ந்திருப்பவர் சிங்கமுத்'தானந்தா!
ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில்தான் இப்படி அவர் கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில், நீங்கதான் ஆன்மீகத்துல ஈடுபாடுள்ளவராச்சே, நித்யானந்தா செஞ்சது சரிதானா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு சிங்கமுத்து தந்துள்ள பதிலைப் பாருங்கள்:
''நித்யானந்தா என்ன தப்பு பண்ணிட்டாரு? எல்லாரும் செய்றதைத்தான் அவரும் பண்றாரு. விஸ்வாமித்திரர்ல இருந்து செஞ்சது தானே. நித்யானந்தா மேல புகார்கள் வந்த பிறகு நானே பிடதியில போய்ப் பிரசங்கம் பண்ணினேன்.
அங்கே பல ஆன்மிகவாதிகளின் வரலாற்றைச் சொல்லி 'நித்யானந்தா செஞ்சது தப்பே இல்லை'னு பேசினேன். இருந்தாலும் நித்யானந்தாவைத் தனியாப் பார்த்து,
'ரஞ்சிதா விவகாரம் உண்மையா?'னு கேட்டேன். பிடதி ஆசிரமத்துக்குள்ள சுத்திட்டு இருந்த ஆயிரக்கணக்கான இளம்பெண்களைக் காட்டி 'இவங்களைவிடவா ரஞ்சிதா அழகு? அவர் ஆஸ்துமா பிரச்னையால் இங்கு வந்தார். குணப்படுத்தினேன். அதில் இருந்து ஆசிரமத்துக்கு வந்து சேவை செய்ய ஆரம்பித்துவிட்டார்'னு சொன்னார்!'


Click it and Unblock the Notifications











