Don't Miss!
- News இன்னும் ஒரு நாள் தான் கெடு..அப்பறம் எல்லாம் ’அவங்க’ கையில்..! மொத்தமாய் இறங்கும் பவர்..ஹை அலர்ட்..!
- Technology செதுக்கி வச்சிருக்கான் சீனாக்காரன்.. 64ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி அட்மாஸ்.. 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
- Lifestyle 100 ஆண்டுகள் கழித்து மீனத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
- Sports RCB vs SRH : எல்லை மீறிப் போன ஆர்சிபி வீரர்கள்.. "நல்ல வார்த்தையில்" திட்டிய விராட் கோலி.. கதறிய ரசிகர்கள்
- Automobiles டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
- Finance சிங்கம் களமிறங்கிடுச்சு.. அலாவுதீன் அற்புத விளக்கை கொண்டு வரும் முகேஷ் அம்பானி..!!
- Education 25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்...!!
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
சின்னத்திரை கலைஞர்களுக்கு கொரோனா நிதி.. கேட்டவுடன் கொடுத்த சிவகார்த்திகேயன்.. ரவிவர்மா பேட்டி!
சென்னை: சில்வர்ஸ்க்ரீன் ஹீரோ ஆனாலும், சின்னத்திரையை மறக்காமல், அதில், கொரோனாவால் வேலை இழந்து வாடும் கலைஞர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியை ரவிவர்மா தனது பேட்டியில் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரை ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளன.
லாக் டவுன் நேரத்தை சமாளிக்க புதிய கன்டென்ட் இல்லாத நிலையில், மெட்டி ஒலி, தங்கம் உள்ளிட்ட பல கிளாசிக் சீரியல்கள் மீண்டும் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
சினிமா கலைஞர்களின் கூட்டமைப்பான FEFSIக்கு நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாயும், தனுஷ் 15 லட்சம் ரூபாயும், சிவகார்த்திகேயன், சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் தலா 10 லட்சம் ரூபாயும் கொடுத்து உதவினர்.
ஆனால், அதே சமயம், தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு உதவி செய்ய ஆட்கள் யாரும் முன் வரவில்லை. இந்நிலையில், அந்த சங்கத்தின் தலைவர் ரவிவர்மா, நடிகர் சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு விஷயத்தை கூற, உடனடியாக தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்கத்தில் இருக்கும் நடிகர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணமும் 10 கிலோ அரிசியும் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதில், உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், ஐசரி கணேஷ் உள்ளிட்ட சிலர் தங்களால் இயன்ற உதவியை சின்னத்திரை கலைஞர்களுக்கும் செய்து வருகின்றனர் என தனது பேட்டியில் ரவிவர்மா கூறினார்.
வெளிமாநிலங்களில் இருந்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பது குறித்த பல்வேறு விஷயங்களையும் ரவி வர்மா பேசியுள்ள வீடியோவை காண லிங்க்கை க்ளிக் செய்யுங்க..