Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சின்னத்திரை கலைஞர்களுக்கு கொரோனா நிதி.. கேட்டவுடன் கொடுத்த சிவகார்த்திகேயன்.. ரவிவர்மா பேட்டி!
சென்னை: சில்வர்ஸ்க்ரீன் ஹீரோ ஆனாலும், சின்னத்திரையை மறக்காமல், அதில், கொரோனாவால் வேலை இழந்து வாடும் கலைஞர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியை ரவிவர்மா தனது பேட்டியில் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரை ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளன.
லாக் டவுன் நேரத்தை சமாளிக்க புதிய கன்டென்ட் இல்லாத நிலையில், மெட்டி ஒலி, தங்கம் உள்ளிட்ட பல கிளாசிக் சீரியல்கள் மீண்டும் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
சினிமா கலைஞர்களின் கூட்டமைப்பான FEFSIக்கு நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாயும், தனுஷ் 15 லட்சம் ரூபாயும், சிவகார்த்திகேயன், சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் தலா 10 லட்சம் ரூபாயும் கொடுத்து உதவினர்.
ஆனால், அதே சமயம், தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு உதவி செய்ய ஆட்கள் யாரும் முன் வரவில்லை. இந்நிலையில், அந்த சங்கத்தின் தலைவர் ரவிவர்மா, நடிகர் சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு விஷயத்தை கூற, உடனடியாக தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்கத்தில் இருக்கும் நடிகர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணமும் 10 கிலோ அரிசியும் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதில், உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், ஐசரி கணேஷ் உள்ளிட்ட சிலர் தங்களால் இயன்ற உதவியை சின்னத்திரை கலைஞர்களுக்கும் செய்து வருகின்றனர் என தனது பேட்டியில் ரவிவர்மா கூறினார்.
வெளிமாநிலங்களில் இருந்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பது குறித்த பல்வேறு விஷயங்களையும் ரவி வர்மா பேசியுள்ள வீடியோவை காண லிங்க்கை க்ளிக் செய்யுங்க..