Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
Exclusive : “என்னை மாதிரி இருக்காதே”... டைட்டிலை வெல்ல ரித்விகாவுக்கு சினேகன் சொன்ன ‘சீக்ரெட்’
பிக் பாஸ் வீட்டில் நன்றாக விளையாடும்படி சினேகன் ரித்விகாவிற்கு அறிவுரை கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை : பிக் பாஸ் வீட்டில் தன்னைப் போல் வாழாமல், நன்றாக விளையாடும்படி ரித்விகாவிற்கு அறிவுரை கூறியதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் முதல் சீசனில் வெற்றியாளராக வருவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர் கவிஞர் சினேகன். அனைத்து போட்டியாளர்களிடமும் நல்ல அபிப்ராயம் பெற்றிருந்த அவருக்கு, இறுதியில் இரண்டாம் இடம் தான் கிடைத்தது.
[ Exclusive: ஐஸ் தான் டைட்டில் வின்னர்... பிக் பாஸிடம் மக்கள் ஓட்டெல்லாம் செல்லாது: சினேகன் ]
காதல் சர்ச்சைகளில் சிக்கிய ஆரவ் டைட்டில் வின்னர் ஆனார்.
முதலிடத்தில் ரித்விகா:
இதேபோல் இம்முறை ரித்விகா தான் மக்களின் ஆதரவைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். ஆனால், தொடர்ந்து பிக் பாஸால் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டு வருகிறார். எனவே, கடைசி நேரத்தில் பிக் பாஸ் டைட்டில் ஐஸ்வர்யாவுக்கு தான் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
முதல் சீசன் போட்டியாளர்கள்:
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதல் சீசன் போட்டியாளர்களான சினேகன், வையாபுரி, ஆரவ், காயத்ரி, ஆரத்தி மற்றும் சுஜா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினர்களாகச் சென்றிருந்தனர். அப்போது அங்குள்ள சீசன் 2 போட்டியாளர்களுக்கு அவர்கள் சில அறிவுரைகள் வழங்கினர்.
சாதுர்யம் குறைவு
அதன்படி, ரித்விகாவிற்கு தான் வழங்கிய அறிவுரை குறித்து ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் கவிஞர் சினேகன். அதில் அவர் கூறியிருப்பதாவது, "ரித்விக்காவுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தாலும்கூட அவரால் ஜெயிக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர்களுக்கு நல்லவர்கள் தேவையில்லை. சாதூர்யமாக விளையாடுபவர்கள் மட்டும் தான் அவர்களுக்கு தேவை. ரித்விகாவுக்கு சாதூர்யம் கொஞ்சம் குறைவு.
உண்மையாக இருந்தால் ஜெயிக்க முடியாது
நாளை நடக்கப் போகிற திரையுலக மற்றும் விளம்பர வித்தையில் ரித்விகாவால் நீச்சல் அடிக்க முடியுமா என்பது கேள்விக்குறி. நம்மை போன்ற ஆட்கள் மிகவும் உண்மையாக இருந்தால் ஜெயிக்க முடியாது என நான் அவரிடம் சொன்னேன். அந்த வீட்டில் நான் வாழ்ந்துவிட்டு வந்தேன். நீயாவது விளையாடிவிட்டு வா என ரித்விகாவுக்கு நான் அறிவுரை கூறினேன்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.