“ப்பா.. ஒரு வேளை சாப்பாட்டுக்கு ரூ. 10 லட்சமா”.. பிரபல நடிகைக்கு ஷாக் கொடுத்த ஹோட்டல் பில்!
லண்டன் உணவகம் ஒன்றில் தான் சாப்பிட்ட காஸ்ட்லி சாப்பாடு பற்றி நினைவு கூர்ந்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
Recommended Video

சென்னை: வெளிநாட்டு உணவகம் ஒன்றில் ஒரு வேளை உணவுக்கு ரூ. 10 லட்சம் பில் அளித்ததாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் மீண்டும் தமிழில் பிசியான நடிகையாகி இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் பிரபல நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இரண்டாவது முறையாக கார்த்தியுடன் அவர் ஜோடி சேர்ந்துள்ள தேவ் படம் நாளை காதலர் தினத்தையொட்டி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், வெளிநாட்டில் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவம் ஒன்று குறித்து பேட்டியொன்றில் பேசியுள்ளார் அவர்.
அதில் அவர், 'லண்டனில் மிஷேலின் ஸ்டார்' என்கிற பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றாராம். அங்கு சாப்பிட்டபின் பில் மட்டும் ரூ. 10 லட்சம் வந்ததாம். 7 பேருக்கு இவ்வளவா என அந்த பில்லைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்து விட்டாராம்.
இந்த அனுபவத்தைத் தொடர்ந்து இனி அந்த ஹோட்டலுக்கு சாப்பிடவே போகக்கூடாது என முடிவெடுத்து விட்டாராம் ரகுல்.


Click it and Unblock the Notifications











