Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சோனா பப்ளிசிட்டி தேடுகிறார்! - சரண்
பிரபல கவர்ச்சி நடிகை சோனா, மங்கத்தா படத்திற்காக இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் தனக்கு பாலியல் தொல்லைகொடுத்ததாக குற்றஞ்சாட்டினார். பாண்டி பஜார் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரும் கொடுத்துள்ளார்.
மேலும் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, பகிரங்கமாக தன்னிடம் சரண் மன்னிப்பு கேட்காவிட்டால் தீக்குளிப்பேன் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் எஸ்.பி.சரண் சோனா புகாருக்கு மறுப்பு கூறியுள்ளார்.
சோனா தன் மீது வீண் பழி சுமத்துவதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''விருந்து நிகழ்ச்சியில் நான் எதுவும் முறை தவறி நடக்கவில்லை. சோனாதான் பப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாம் செய்கிறார். படம் தொடர்பாக மட்டுமே அவரிடம் பேசினேன்,' என்றார்.
இதனிடையே விருந்து நிகழ்ச்சியில் இத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று இயக்குனர் வெங்கட்பிரபுவும் மறுத்துள்ளார்.
வெங்கட் பிரபுவும் சரணும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.