சிருஷ்டி டாங்கே மனசு விட்டு பேசிய தருணங்கள்
Recommended Video
சென்னை : கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கே தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைக்கான இவர் நடித்துள்ள ராஜாவுக்கு செக் படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றதுள்ளது.
இவர் பிலிமி பிட் சேனலுக்கு பிரத்யேக சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

சினிமாவிற்கு நடிக்க வந்து பத்தாண்டுகள் ஆகி விட்டன என்ன நினைக்கிறீர்கள்?
எனக்கு பத்து வருடங்கள் கடந்தது போல தெரியவில்லை. நான் இப்போது தான் நடிக்கவந்தது போல இருக்கிறது.எனக்கு மிகவும் சந்தோஷம் என புன்னகை உடன் கூறினார் சிருஷ்டி.
யாருக்கு அமையாதது உங்களுக்கு முதல் படத்திலேயே அமைந்தது அதனை பற்றி ?
என்ன சொல்வது அது ஒரு மேஜிக் தான்.மேஜிக் செய்யும் விஷயங்களை விளக்கி கூற முடியாது.பிளான் செய்து செய்யும் காரியங்களை விளக்கி கூற முடியும்
ஆனால் மேஜிக்கை எப்படி அதுவாக நடந்தது.மொத்தத்தில் மேஜிக் மேஜிக்.

உங்கள் குரு மிஷ்கின் சைக்கோ படத்தை பற்றி?
அது ஒரு வித்தியாசமான படம்.வித்தியாசமான பதிவு.திரில்லர் படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சி.ஹாலிவுட் சாயல் உடன் ஒரு தமிழ் படம்.
ஆரம்பகாலத்தில் அதிக படங்களில் நடித்தீர்கள் தற்போது இல்லையே எதனால் ?
நான் ஹீரோயின் அல்ல ஒரு ஆடிஸ்டு. எனக்கும் ஒரு ப்ரேக் வேண்டும் மற்றும் கதை நன்றாக இருக்க வேண்டும் நடிப்பதற்கு.
ராஜாவுக்கு செக் படம் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்.இதில் என் கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமாக இருந்தது அதனால் நடித்தேன் எனக்கு திருப்திகரமாக இருந்தது அதுபோதும் என்றார் சிருஷ்டி.

கட்டில் படத்தை பற்றி?
இது ஒரு சென்டிமென்டல் படம்.நானும் சென்டிமெண்ட் ஆன நபர்.கட்டில் அதனை சுற்றியே கதை நகர்கிறது.ஒரு வித்தியாசமான முயற்சி.இது ஒரு குடும்ப திரைப்படம் டிரெய்லர் ரீலீஸ் ஆகும் போது மேலும் இதனை பற்றி பேசுகிறேன்.
முத்த காட்சிகள் மற்றும் நெருக்கமான காட்சிகள் நடிப்பது ஒகே வா ?
மறுபடியும் கூறுகிறேன் நான் ஒரு ஆர்டிஸ்டு.படத்திற்கு தேவை என்றால் நான் அது போன்ற காட்சிகளில் நடிப்பேன்.ராஜாவுக்கு செக் படத்தில் அது போன்ற ஒரு வித்யாசமான காட்சி உண்டு அதனை நான் நடிக்கமாட்டேன் என்று கூறினேன்.இயக்குனர் பல முறை விளக்கினார்.கதைக்கு தேவை என்பதனால் நடித்தேன் என்றார் சிருஷ்டி டாங்கே.
அப்பா மற்றும் அம்மா உங்களுக்கு துணையாக எப்படி இருக்கிறார்கள்
அவர்களது உழைப்பு மிகவும் பாராட்ட பட வேண்டியது. நான் முழுக்க சினிமாத்துறைக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன்.அவர்கள் தான் எல்லாம் எனக்கு. எனக்கு இது போன்ற அம்மா அப்பா கிடைத்தது மகிழ்ச்சி என்று கூறினார் சிருஷ்டி டாங்கே.
இது போன்ற பல கேள்விகளுக்கு மகிழ்ச்சியாக பதில் அளித்தார் சிருஷ்டி டாங்கே.


Click it and Unblock the Notifications











