வாரணாசி படத்தில் 30 நிமிடங்கள் நீளும் ராமாயண போர்க்காட்சி.. ரகசியத்தை உடைத்த ராஜமெளலி அப்பா!

மும்பை: இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் அடுத்த மிகப்பெரிய படைப்பான 'வாரணாசி' படத்தில் சுமார் 30 நிமிடங்கள் ராமாயண போர்க் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் ரகசியத்தை ராஜமெளலியின் தந்தையும் பிரபல திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த அதிரடி தகவலை படத்தின் கதையாசிரியரும், ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அவரது தகவலின்படி, இந்த போர் காட்சி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராமனுக்கும் கும்பகர்ணனுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க மோதல் திரைப்படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

SS Rajamouli Father Vijayendra Prasad Garu reveals Ramayana portion duration in Varanasi movie

ராமராக மகேஷ் பாபு: இந்தப் படத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவர் 'ருத்ரா' மற்றும் 'ராமர்' ஆகிய இரு முக்கிய கதாபாத்திரங்களில் திரையில் தோன்றவுள்ளார். இந்த இரு வேடங்களும் கதையின் மையக் கருவாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் அறிமுக க்ளிம்ப்ஸில் காளை மாட்டில் அவர் வரும் காட்சிகள் மிரட்டலாக இருந்தன. ராமராகவும் மகேஷ் பாபு தோன்றவுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எல்லைகளை கடந்துள்ளது.

கும்பகர்ணனாக பிரித்விராஜ் சுகுமாரன்: மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் சுகுமாரன், இப்படத்தில் கும்பகர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது கதாபாத்திரம் குறித்து அவர் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், கும்பகர்ணன் கதாபாத்திரத்திற்காக தனது முக பாவனைகளை மட்டுமே பயன்படுத்தி நடித்ததாகவும், கழுத்துக்கு கீழே உள்ள உடல் பகுதி முழுவதும் CGI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தனது உணர்வுகளையும், நடிப்பு திறமையையும் முழுமையாக முகத்தின் மூலம் மட்டுமே வெளிப்படுத்திய அனுபவம் மிகவும் வித்தியாசமானதாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல்களை அவர் சர்வதேச திரைப்பட ஊடகமான Collider-க்கு அளித்த பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

பல நாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்பு: 'வாரணாசி' திரைப்படத்தின் படப்பிடிப்பு உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, அண்டார்டிகாவில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் இந்த படம் பெறவுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமா புதிய சாதனையை படைக்க உள்ளது.

நட்சத்திர பட்டாளம்: இந்த பிரம்மாண்ட படைப்பில் பிரியங்கா சோப்ரா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், பல இந்திய சினிமா பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருவதாக கூறுகின்றனர்.

2027-ல் திரைக்கு வரும் 'வாரணாசி': பிரம்மாண்ட காட்சியமைப்புகள், உலகத் தரத்திலான தொழில்நுட்பம், புராணக் கதையை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி வரும் 'வாரணாசி', 2027-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'பாகுபலி' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' படங்களுக்குப் பிறகு ராஜமௌலி உருவாக்கும் இந்த புதிய காவியம், இந்திய சினிமாவின் அடுத்த மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கல்கி படத்தில் மகாபாரத காட்சிகள் குறைந்த நேரத்தில் வெளியான நிலையிலேயே மிகப்பெரிய தாக்கத்தை வெளிப்படுத்திய நிலையில், ராமாயண போர்க் காட்சி 30 நிமிடங்கள் வரவுள்ள நிலையில், தியேட்டர்கள் தெறிக்கும் என்பது உறுதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X