எல்லா நடிகைகளும் ரஞ்சிதா அல்ல!-தமன்னா

பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், நான் கோவிலுக்குப் போவேன். சாமி கும்பிடுவேன். அதோடு சரி. அளவுக்கதிகமாக ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவதில்லை.
ரஞ்சிதா பற்றி நான் என்ன சொல்ல... அது அவர் சொந்த விஷயம். அதுபற்றி நான் கருத்து கூற முடியாது. இந்த உலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வெரு மாதிரி எல்லோரையும் ஒரே மாதிரி நினைக்கக்கூடாது. ரஞ்சிதா தப்பு செய்துவிட்டார் என்பதற்காக மற்ற நடிகைகளை தப்பாக நினைக்கக்கூடாது...." என்றார்.
சூர்யா, கார்த்தி சகோதரர்கள் இருவருடனும் நடித்துள்ளீர்களே... இவர்களில் யார் உங்களுக்கு வசதியாக இருந்தார் என்ற கேள்வியை நிருபர்கள் கேட்க, சற்று நேரம் யோசித்தவர் இப்படிச் சொன்னார்:
"அயன் படத்தில் சூர்யாவுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்து காதல் காட்சிகளில் நடித்தேன், அவருடன் நடிப்பதற்கு முன்பே நான் அவருடைய ரசிகை. முதன்முதலாக அவருடன் நடிக்கும் போது எனக்கு கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. ஆனால் கார்த்தி அப்படியல்ல அவர் எப்போது பார்த்தாலும் தமாஷ் செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பார். அதனால் அவருடன் நடிக்கும் போது பதற்றமில்லை. காதல் காட்சிகளில் நடிக்கும் போது சவுகரியமாகவே இருந்தது. சூர்யா, கார்த்தி இரண்டு பேருமே நைஸ்... கம்ஃபர்ட்!" என்றார்.


Click it and Unblock the Notifications











