துடிக்கும் தேஜாஸ்ரீ ஆடிக் கலக்கியது அவ்வளவுதான், இனிமேல் நடிப்பு, நடிப்பு, நடிப்பு மட்டுமேஎன்னிடமிருந்து கிடைக்கும் என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார் தேஜாஸ்ரீ.வெளக்கி வச்ச வெள்ளிக் குத்து விளக்கு கணக்கில் இருக்கும் தேஜாஸ்ரீ, தனது முதல்ஆட்டத்திலேயே ரசிகர்களை முக்கி, முணக வைத்தவர்.சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா என்று அவர் கேட்டுப் பாடிஆடியபோது ரசிகர்கள் பலரும் சிமெண்ட், செங்கல், ஜல்லியாகவே மாறிப் போயினர்.இதைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் ஒத்தப் பாட்டுக்குக் குத்தாட்டம்போடவாய்ப்பு வந்தது. ஆரம்பத்தில் ஒத்துக் கொண்டு அசத்தினார் தேஜாஸ்ரீ. ஆனால் தேஜாஸ்ரீயின் இலக்கு எல்லாம் நடிப்பில்தான் இருந்தது. இதனால் தன்னைத்தேடி வந்த குத்தாட்ட வாய்ப்புகளை தவிர்த்து நடிப்புடன் கூடிய ஆட்டமாக இருந்தால்மட்டுமே ஒத்துக் கொள்ள ஆரம்பித்தார். இதனால் அதிக படங்களில் ஆடும் வாய்ப்புஅவருக்கு நழுவியது.இருந்தாலும் தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிராமாதித்தன் போல நடிப்புபிளஸ் ஆட்டம் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பாலுமகேந்திராவின் அது ஒருகனாக்காலம் படத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்தது.அதன் பிறகு விவேக்குடன் சொல்லி அடிப்பேன் படத்தில் 2 ஹீரோயின்களில்ஒருவராக வாய்ப்பு. இப்போது வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசிபடத்திலும் சூப்பர் கேரக்டர்.இனிமே ஆட்டம் அவ்வளவுதானா என்று விசனத்துடன் தேஜாஸ்ரீயைக் கேட்டால்,ஆமாமா என்றார் சந்தோஷமாக. வெறுமனே உடம்பைக் காட்டி ஆடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒருஅறிமுகத்துக்காகத்தான் நான் ஆட்டக்காரியாக அறிமுகம் ஆனேன். ஆனால் வெறும்பாட்டுக்கு மட்டும் ஆடுமாறு நிறைய வாய்ப்புகள் வந்ததால் அவற்றையெல்லாம்என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.நடிப்புதான் முக்கியம் என்று தவமாய் காத்திருந்தேன். அதற்கேற்ப இப்போது நல்லநல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சந்தோஷமாக இருக்கிறேன். கள்வனின்காதலி படத்தில் நான் போட்ட பிட் ஆட்டம்தான் கடைசி குத்தாட்டம். இனிமேல்கிடையாது.என்னை நடிகையாகத்தான் எல்லோரும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.ஆட்டக்காரி என்று சொல்வதை விரும்பவில்லை. விவேக், வடிவேலுவுடன் நல்லரோல்களில் நடித்து வருகிறேன்.சம்திங்சம்திங் உனக்கும் எனக்கும் படத்தில் ஜெயம் ரவியுடன் கேரக்டர் செய்கிறேன்.எனது உடல் வாகுக்கு கிளாமர் காட்டினால் நன்றாகத்தான் இருக்கும், அதற்காகலட்சியத்தை விட்டு விட முடியுமோ? என்கிறார். இத்தோடு நிற்கப் போவதில்லையாம் தேஜாஸ்ரீ. கதக் கற்றுக் கொடுப்பதற்காக ஒருபள்ளிக் கூடத்தை ம்பையில் ஆரம்பிக்கும் திட்டம் உள்ளதாம். விரைவில் அந்தக்கனவும் நிறைவேறுமாம்.அப்ப இனிமேல் நம்ம கனவில் தேஜாஸ்ரீ வர மாட்டார்.
ஆடிக் கலக்கியது அவ்வளவுதான், இனிமேல் நடிப்பு, நடிப்பு, நடிப்பு மட்டுமேஎன்னிடமிருந்து கிடைக்கும் என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார் தேஜாஸ்ரீ.
வெளக்கி வச்ச வெள்ளிக் குத்து விளக்கு கணக்கில் இருக்கும் தேஜாஸ்ரீ, தனது முதல்ஆட்டத்திலேயே ரசிகர்களை முக்கி, முணக வைத்தவர்.
சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா என்று அவர் கேட்டுப் பாடிஆடியபோது ரசிகர்கள் பலரும் சிமெண்ட், செங்கல், ஜல்லியாகவே மாறிப் போயினர்.
இதைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் ஒத்தப் பாட்டுக்குக் குத்தாட்டம்போடவாய்ப்பு வந்தது. ஆரம்பத்தில் ஒத்துக் கொண்டு அசத்தினார் தேஜாஸ்ரீ.
ஆனால் தேஜாஸ்ரீயின் இலக்கு எல்லாம் நடிப்பில்தான் இருந்தது. இதனால் தன்னைத்தேடி வந்த குத்தாட்ட வாய்ப்புகளை தவிர்த்து நடிப்புடன் கூடிய ஆட்டமாக இருந்தால்மட்டுமே ஒத்துக் கொள்ள ஆரம்பித்தார். இதனால் அதிக படங்களில் ஆடும் வாய்ப்புஅவருக்கு நழுவியது.
இருந்தாலும் தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிராமாதித்தன் போல நடிப்புபிளஸ் ஆட்டம் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பாலுமகேந்திராவின் அது ஒருகனாக்காலம் படத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு விவேக்குடன் சொல்லி அடிப்பேன் படத்தில் 2 ஹீரோயின்களில்ஒருவராக வாய்ப்பு. இப்போது வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசிபடத்திலும் சூப்பர் கேரக்டர்.
இனிமே ஆட்டம் அவ்வளவுதானா என்று விசனத்துடன் தேஜாஸ்ரீயைக் கேட்டால்,ஆமாமா என்றார் சந்தோஷமாக.
வெறுமனே உடம்பைக் காட்டி ஆடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒருஅறிமுகத்துக்காகத்தான் நான் ஆட்டக்காரியாக அறிமுகம் ஆனேன். ஆனால் வெறும்பாட்டுக்கு மட்டும் ஆடுமாறு நிறைய வாய்ப்புகள் வந்ததால் அவற்றையெல்லாம்என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
நடிப்புதான் முக்கியம் என்று தவமாய் காத்திருந்தேன். அதற்கேற்ப இப்போது நல்லநல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சந்தோஷமாக இருக்கிறேன். கள்வனின்காதலி படத்தில் நான் போட்ட பிட் ஆட்டம்தான் கடைசி குத்தாட்டம். இனிமேல்கிடையாது.
என்னை நடிகையாகத்தான் எல்லோரும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.ஆட்டக்காரி என்று சொல்வதை விரும்பவில்லை. விவேக், வடிவேலுவுடன் நல்லரோல்களில் நடித்து வருகிறேன்.
சம்திங்சம்திங் உனக்கும் எனக்கும் படத்தில் ஜெயம் ரவியுடன் கேரக்டர் செய்கிறேன்.
எனது உடல் வாகுக்கு கிளாமர் காட்டினால் நன்றாகத்தான் இருக்கும், அதற்காகலட்சியத்தை விட்டு விட முடியுமோ? என்கிறார்.
இத்தோடு நிற்கப் போவதில்லையாம் தேஜாஸ்ரீ. கதக் கற்றுக் கொடுப்பதற்காக ஒருபள்ளிக் கூடத்தை ம்பையில் ஆரம்பிக்கும் திட்டம் உள்ளதாம். விரைவில் அந்தக்கனவும் நிறைவேறுமாம்.
அப்ப இனிமேல் நம்ம கனவில் தேஜாஸ்ரீ வர மாட்டார்.


Click it and Unblock the Notifications











