தல அஜித் ரகசியமா சோஷியல் மீடியாவை வாட்ச் பண்றாரு.. நடிகை பிரியதர்ஷனி சொன்ன சர்ப்ரைஸ்!
சென்னை: தல அஜித் ரகசியமா சமூக வலைதளங்களை கண்காணித்து வருகிறார் என கவண் நடிகை பிரியதர்ஷனி சர்ப்ரைஸ் தகவலை கூறியுள்ளார்.
Recommended Video
அச்சம் என்பது மடமையடா, கவண் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பிரியதர்ஷனியின் பார்ட் 2 பேட்டி வெளியாகி உள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, பிக்பாஸ் அபிராமி, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தில், முக்கிய ரோலில் நடிகை பிரியதர்ஷனி நடித்து இருந்தார்.
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் ஆலோசகராகவும் அவரது வெல் விஷராகவும் அவர் நடித்திருப்பார்.
அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது, தல அஜித்தை பார்க்க போகிறோம் என்ற ஆர்வத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு இருந்ததாகவும், நடிகர் அஜித்தை சந்தித்த போது, ஓ நீங்க தான் அந்த ஃபேஸ்புக் போஸ்ட் போட்டவங்களா? என அவர் கேட்டதும், உங்களுக்கு எப்படி சார் தெரியும் என கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே பி.ஆர்.ஓ சொன்னார் எனக் கூறிவிட்டு நகர்ந்து சென்றார் என சத்தமில்லாமல் நடிகர் அஜித் சமூக வலைதளத்தை கண்காணித்து வருவது குறித்து தனது பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அஜித்துடன் இணைந்து நடித்த அனுபவங்கள் குறித்து அவர் கூறியிருப்பதை வீடியோவில் கண்டு மகிழுங்கள்!


Click it and Unblock the Notifications











