Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
"நீ குச்சி ஊன்ற வரைக்கும் நடிச்சுகிட்டு இருப்ப..ஜோதிடர் சொன்னது பளித்தது.. வெண்ணிற ஆடை மூர்த்தி!
சென்னை : நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி தமிழ் சினிமாவில் பழம் பெரும் மூத்த நடிகர். இன்று வரை தொடர்ந்து நடித்துக் கொண்டு இருக்கிறார்.
வழக்கறிஞர் ஆவதற்காக படித்த வெண்ணிற ஆடை மூர்த்தி சினிமாவின் மீது கொண்ட காதலால் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மிக பிரபலமாக உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தான் திரைத்துறைக்குள் வந்த அதிசயத்தை பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சிக்கென்ற இடையை காட்டி ..சேலையில் அசத்தும் பிரணிதா...உங்க இடுப்பு சூப்பர் என வர்ணித்த ரசிகர்கள்!
அடைமொழியோடு
பிரபல இயக்குனர் சிபி ஸ்ரீதர் இயக்கிய "வெண்ணிற ஆடை" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த மூர்த்தி பின் பலராலும் வெண்ணிற ஆடை மூர்த்தி என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.
ரசிகர்களின் ஆதரவோடு
நடிகை ஜெயலலிதா மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்து இருந்த இந்த திரைப்படம் 1965 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் ஆதரவோடு வெற்றி பெற்றது.
குணச்சித்திர கதாபாத்திரங்களிலும்
இவ்வாறு தனது முதல் காலடியை பதித்த வெண்ணிற ஆடை மூர்த்தி இன்றுவரை பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார்.
சமூக கருத்தையும்
மேலும் இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான "மீண்டும் மீண்டும் சிரிப்பு" என்ற நிகழ்ச்சியில் தோன்றி அனைவரையும் சிரிக்க வைத்ததோடு கடைசியில் சமூக கருத்தையும் வைத்து இன்றளவும் பலராலும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக மாற்றியிருக்கிறார்.
வழக்கறிஞராக ஆசைப்பட்டு
தமிழில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் பிரபலமான சீனியர் கிரிமினல் வழக்கறிஞரான கே ஆர் நடராஜ சாஸ்திரி என்பவரின் மகனாவார். இவரது அப்பா, வெண்ணிற ஆடை மூர்த்தியையும் தன்னைப் போலவே வழக்கறிஞராக்க ஆசைப்பட்டு வழக்கறிஞருக்கு படிக்க வைத்தார்.
அஸ்ட்ராலஜி பத்திரிக்கை
ஆனால் வழக்கறிஞர் ஆவதில் பெரிதும் நாட்டமில்லாத வெண்ணிற ஆடை மூர்த்தி, ஒரு நாள் கல்லூரிக்கு அருகில் இருக்கும் கேண்டினில் சாப்பிடப் போகும்போது எதர்ச்சையாக ஒரு அஸ்ட்ராலஜி பத்திரிக்கையை பார்த்து வாங்கியும் படித்துள்ளார்.
சந்திக்க வருமாறு
"அஸ்ட்ராலஜி அண்ட் அதிர்ஷ்ட" என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த பத்திரிக்கையை பார்த்து எதிர்காலத்தில் நடப்பதை எப்படி இவர் சரியாக கணிக்கிறார் என்ற சந்தேகத்தில் அந்த ஜோதிடரை இவர் பார்க்க முற்பட, அவரும் கேட்கும்போதெல்லாம் சில நாட்கள் தள்ளிப் போட்டு பின் ஒரு நாள் இவரை சந்திக்க வருமாறு அழைத்திருக்கிறார்.
சினிமால தான் நடிப்ப
ஆர்வத்துடன் போன வெண்ணிற ஆடை மூர்த்திக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவரைப் பற்றிய முழு தகவலையும் புட்டு புட்டு வைத்த அந்த ஜோதிடர், பின் இவரை பார்த்து "உனக்கு "லா" எல்லாம் வெறும் அம்பரல்லா தான்.. நீ மேக்கப் போட்டு சினிமால தான் நடிப்ப" எனக்கூற வெண்ணிற ஆடை மூர்த்தி அதை நம்பாமல் எனக்கு பேப்பரில் எழுதித் தாருங்கள் எனக் கேட்க அந்த ஜோதிடம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
நன்றி சொல்ல
சில மாதங்கள் கழித்து ஜோதிடர் சொன்னது போலவே தனது முதல் திரைப்படமான "வெண்ணிற ஆடை"யில் நடித்தார். இவ்வாறு தனது முதல் திரைப்படத்தில் நடித்த ஆனந்தத்தில் அந்த ஜோதிடரை பார்த்து நன்றி சொல்ல மீண்டும் போன வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் "நீ குச்சி ஊன்ற வரைக்கும் நடிச்சுகிட்டு இருப்ப உன் கூட நடிக்க வந்தவர்கள் எல்லாம் வீட்டுக்கு போயிடுவாங்க ".
நடுத்தெருவுக்கு வந்துடுவ
" ஒருவேளை நடிப்பை விட்டுட்டு வேற வேலைக்கு சென்றால் அங்கு நீ நிறைய சம்பாதிப்ப ஆனா சீக்கிரமே நடுத்தெருவுக்கு வந்துடுவ". இதுதான் உனக்கு விதிக்கப்பட்ட வேலை அதை சரியாக செய்". என சொன்னவர் உனக்கு ஜோதிடமும் வரும் கற்றுக்கொள் எனக்கூற அதையும் கற்றுக் கொண்டுள்ளார் வெண்ணிற ஆடை மூர்த்தி.
நடிக்க வந்ததையும்
இவ்வாறு தான் சினிமாவில் நடிக்க வந்ததையும் ஜோதிடம் என்ற கலையை கற்றுக் கொண்டதையும் பற்றிய யாரும் அறியாத தகவலை அந்தப் பேட்டியின் மூலம் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்த அந்த வீடியோ இப்பொழுது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்