பனையூரில் என்ன நடந்தது தெரியுமா? விவாகரத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்.. பயில்வான் சொல்வது என்ன?
சென்னை: தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவாகரத்திற்கு காரணம் தனது கணவருக்கு ஒரு நடிகையுடன் இருந்த தொடர்பு தான் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியுப் சேனலில் பேசி உள்ளார்.
அதில், இதற்கு முன்பாகவே நான் சங்கீதா, விஜய் விஷயம் குறித்து பேசி இருக்கிறேன். அனைத்து விஷயத்தையும் முன்கூட்டியே சொல்லிவிடுவேன் அப்படித்தான் அந்த விஷயத்தையும் சொன்னேன். என்னுடைய 45 ஆண்டுகால அனுபவம் இப்படித்தான் நடக்கும் என்று எனக்கும் தெரியும். என்னைக்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சங்கீதா வெளிநாடு சென்றாரோ அன்னைக்கே முடிவு செய்துவிட்டேன் இது தேராது என.
விஜயின் பையன் ஒருநாள் பனையூர் சென்று இருக்கிறான். அந்த வீட்டில் வேறு ஒரு நடிகை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார் மகன். இப்போது விஜயின் மகன் சினிமாவில் இருப்பதால், அவனுடைய நண்பர்கள் எல்லாம் அப்பா பற்றி கேட்கும் போது அவன் மனநிலை எப்படி இருக்கும், இது எல்லாம் யோசித்துப் பார்த்தாரா விஜய்?

விஜய்யின் மனைவி சங்கீதா: விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்துக்கான சொல்லும் காரணங்கள் அனைத்தும் தெளிவாக இருக்கிறது. வேறு வழியே இல்லாமல் என்னுடைய கணவுவரை விட்டு பிரிந்து வாழ்ந்தேன். எப்போது சட்டபூர்வமாக அவரிடம் இருந்து விவாரத்து பெற மனு போட்டு இருக்கிறார். அண்மையில் நயினா நாகேந்திரன் நடிகையுடனான தொடர்பு பற்றி பேசுகிறார். ஆனால், இப்பொழுது விஜயின் மனைவி நடிகையின் உறவை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை முக்கியம்: இதற்கு விஜய் என்ன சொல்லப் போகிறார். இவர் நடிகராக மட்டும் இருந்திருந்தால், அவருக்கு எந்தவிதமான பிரச்சனையும் வந்து இருக்காது, ஆனால், தற்போது விஜய் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருக்கிறார். அடுத்த முதலமைச்சராக இவர் போட்டி போட இருக்கிறார். அப்படிப்பட்டவர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமானவராக இருக்க வேண்டும். ஒரு மனைவிக்கு இப்படி துரோகத்தை செய்யலாமா? அதுவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்யலாமா?
நடிகையும் சிக்குவார்: விஜய் ஒன்றும் அவரை சும்மா திருமணம் செய்து கொள்ளவில்லை, சங்கீதாவிற்கு பல கோடியில் லண்டன் மற்றும் இலங்கையில் சொத்து இருப்பதால் தான் திருமணம் செய்து கொண்டார். மிகப்பெரிய கோடீஸ்வரர் வீட்டு பெண் தான் சங்கீதா. ஆனால், தனது விஜய்யின் பெயருக்கும் புகழுக்கும் ஏற்றபடி நிரந்தர ஜீவனாம்சம் தரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதே போல, இதுபற்றி வழக்கு விசாரணைக்கு வரும் போது, சம்மந்தப்பட்ட நடிகையிடமும் விசாரணை நடத்தப்படும். இவை அனைத்திற்கும் ஆதாரம் அனைத்தும் இருக்கிறது. இதுநிச்சயமாக விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். அவரை கொண்டாடிய பெண்கள் எல்லாம் சங்கீதா போல மனம் வெறுத்துப்போவார்கள் என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











